tag:blogger.com,1999:blog-64268919711210761872023-11-15T18:35:17.391+05:30திருக்குறள் உரைகள்ஆசிரியர்: திருத்தம் பொன்.சரவணன்பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-6426891971121076187.post-41956461968014763582014-06-07T18:00:00.000+05:302014-06-07T18:00:33.208+05:30ஈகை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்<br />குறியெதிர்ப்பை நீர துடைத்து. - 221<br /><br /><b>தி.பொ.ச. உரை:</b> பொருள் இல்லாத வறியவர்களுக்குப் பொருளோ உணவோ கொடுத்து உதவுவதே கருணையாகும். இவற்றை மற்றவர்களுக்குக் கொடுப்பதெல்லாம் பலனை எதிர்பார்த்துச் செய்வதாகும். <br />=====================================================<br /><br />நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்<br />இல்லெனினும் ஈதலே நன்று. - 222<br /><br /><b>தி.பொ.ச. உரை:</b> மேன்மக்கள் தாமாகவே வந்து நல்லமுறையிலே பொருளைக் / உணவைக் கொடுத்தாலும் அதைப் பெற்றுக்கொள்வது நல்லதன்று. கொடுக்கும் நிலையில் இல்லையென்றாலும் இரந்தவர்க்கு உதவி செய்வதே நல்லது. ( இங்கு மேலுலகம் என்று வள்ளுவர் குறிப்பிடுவது மேன்மக்களை. எந்நிலையில் இருந்தாலும் 'ஏற்பது இகழ்ச்சி' என்பதே இக் குறளின் துணிபாகும். ) <br />===================================================<br /><br />இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்<br />குலனுடையான் கண்ணே யுள. - 223<br /><br /><b>தி.பொ.ச. உரை: </b>இல்லை என்று வெறுப்புடன் கூறாமல் இரந்தாரிடத்துக் கருணையுடன் நடந்துகொள்வது நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவரின் பண்பாகும். ( இங்கு எவ்வம் என்பது வெறுப்பினைக் குறிக்கும். அகராதி காண்க. )<br />=================================================<br /><br />இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்<br />இன்முகங் காணும் அளவு. - 224<br /><br /><b>தி.பொ.ச. உரை:</b> இரந்தவருக்கு உதவிசெய்து அவரது முகத்தில் மகிழ்ச்சியை உண்டாக்காதவரை பொருளிருந்தாலும் அது இரக்கப்படுவோருக்கு மகிழ்ச்சியைத் தராது. <br />====================================================<br /><br />ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை<br />மாற்றுவார் ஆற்றலின் பின். - 225<br /><br /><b>தி.பொ.ச. உரை:</b> பசி என்று வந்தவருக்குத் தம் பசியினையும் பொறுத்துக்கொண்டு உணவளித்து உதவுபவரே உலகின் மிகச்சிறந்த வல்லவராம். <br />================================================<br /><br />அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்<br />பெற்றான் பொருள்வைப் புழி. - 226<br /><br /><b>தி.பொ.ச. உரை:</b> பொருளற்ற வறியவர்களுக்கு உணவளித்து உதவுவது ஒன்றே பொருளைப் பாதுகாத்து வைக்கும் வழியாகும். ( ஏனைய வழிகளில் பாதுகாத்து வைத்தாலும் அவற்றை இழக்க நேரிடும் என்பதே இக் குறளின் துணிபாகும். இங்கு உழி என்பது வழி / நெறி என்ற பொருளில் வந்துள்ளது. இதே பொருளில் குறள் 168 லும் வந்துள்ளது காண்க. )<br />===================================================<br /><br />பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்<br />தீப்பிணி தீண்டல் அரிது. - 227<br /><br /><b>தி.பொ.ச. உரை:</b> தான் பெற்ற உணவினை வறியவர்களுடன் பகிர்ந்து உண்ணும் பழக்கமுடையவனைக் கடும்பசி என்னும் நோய் ஒருநாளும் நெருங்கமுடியாது. <br />====================================================<br /><br />ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை<br />வைத்திழக்கும் வன்க ணவர். - 228<br /><br /><b>தி.பொ.ச. உரை:</b> தம் பொருளை வறியவர்களுக்குக் கொடுத்துதவி இன்பமடையத் தெரியாத கொடியவர்கள் அப் பொருளை இழந்து துன்பமே அடைவர். <br />================================================ <br /><br />இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய<br />தாமே தமியர் உணல். - 229<br /><br /><b>தி.பொ.ச. உரை:</b> தான் இரந்துபெற்ற உணவினைத் (தன்னிடம் இரந்தவருக்குக் கொடுக்காமல்) தான் மட்டுமே உண்பது, இரந்துபெறுவதைக் காட்டிலும் இழிவானது. ( இங்கு இன்னாது என்பது இழிவானது என்ற பொருளில் வந்துள்ளது. குறள்கள் 857, 894, 923, 995, 35, 230 போன்றவற்றிலும் இதே இழிவுப் பொருளில் வந்துள்ளது காண்க. )<br />==================================================<br /><br />சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்<br />ஈதல் இயையாக் கடை. - 230<br /><br /><b>தி.பொ.ச. உரை:</b> ஒருவன் வறுமையினால் இறப்பதைக் காட்டிலும் தன்னிடம் இரந்தவருக்கு உதவிசெய்ய முடியாத நிலையில் இறப்பது மேலானது. ( இங்கும் இன்னாது என்பது இழிவுப் பொருளில் வந்துள்ளது. அதுமட்டுமின்றி இன்னாநாற்பது என்னும் நூலில் இன்னா என்பது இழிவுப் பொருளில் பல இடங்களில் வந்துள்ளதைக் காணலாம். ஆனால் இப் பொருள் அகராதிகளில் ஏனோ காணப்படவில்லை. ) <br />=======================xxxxxx========================</div>
பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6426891971121076187.post-34553029997709881392014-06-04T14:01:00.000+05:302014-06-04T14:23:20.504+05:30தீவினையச்சம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்<br />
தீவினை என்னும் செருக்கு. - 201<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> தீவினை ஆகிய அழிவினைச் செய்ய நல்லவர்களே அஞ்சுவர்; தீயவர்கள் அஞ்சுவதில்லை. ( எனவே தீயவர்களிடம் இருந்து விலகியே இருங்கள் என்று எச்சரிக்கிறார் வள்ளுவர். இங்கு செருத்தல் = அழித்தல். செருத்தல் வினையின் பயனாகிய அழிவே செருக்கானது. அகராதி காண்க. என்னும் என்பதற்குப் பதிலாக ஈனும் என்றும் வரும். )<br />
===========================================================<br />
<br />
தீயவை தீய பயத்தலால் தீயவை<br />
தீயினும் அஞ்சப் படும். - 202<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> தீய செயல்கள் எப்போதும் தீமையே தருவதால் அவற்றைத் தீயைக் காட்டிலும் கொடியதாகக் கருதி அவற்றைச் செய்வதற்கு அஞ்சிடவேண்டும். ( ஐந்து பூதங்களுள் ஒன்றான தீயினை ஆக்கத்திற்கும் பயன்படுத்தலாம்; அழிவிற்கும் பயன்படுத்தலாம். அதாவது தீயினால் நன்மையும் உண்டு; தீமையும் உண்டு. ஆனால் தீய செயல்களால் எப்போதும் தீமையே விளைவதால் அவற்றைத் தீயைக் காட்டிலும் கொடியவை என்கிறார் வள்ளுவர். )<br />
====================================================<br />
<br />
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய<br />
செறுவார்க்கும் செய்யா விடல். - 203<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> தம்மிடம் எப்போதும் வெறுப்புடன் நடந்து கொள்பவர்களிடத்தில் கூட தீமை செய்யாமலிருப்பதே தலைசிறந்த அறிவுடையோரின் பண்பாகும். ( இதற்கான காரணத்தினை அடுத்த குறளில் கூறுகிறார் வள்ளுவர். )<br />
==========================================================<br />
<br />
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்<br />
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. - 204<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> பிறர்க்குத் தீமைதருவதான செயல்களை மறந்துகூட செய்யவேண்டாம். அப்படிச்செய்தால் அவ் வினைகளின் பயனை காலப்போக்கில் செய்தவரே அனுபவிக்க வேண்டி வரும். ( இங்கே அறமானது காலப் பொருளில் பயன்படுத்தப்பட்டது. இதைத்தான் 'பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்' என்று இன்னோரிடத்தில் விளக்கினார். கெடுவான் கேடு நினைப்பான் என்ற முதுமொழியும் இதன் அடிப்படையில் உருவானதே. ) <br />
=====================================================<br />
<br />
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்<br />
இலனாகும் மற்றுப் பெயர்த்து. - 205<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> வறியவன் ( தானே என்ன செய்துவிட முடியும்) என்று எண்ணி அவரிடத்துத் தீமை செய்யவேண்டாம். செய்தால் அனைத்தையும் இழந்து அவரை விடவும் வறியவனாக வேண்டிவரும். <br />
======================================================<br />
<br />
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால<br />
தன்னை அடல்வேண்டா தான். - 206<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> மனக்கவலையால் தாம் வருந்தக்கூடாது என்று விரும்புகிறவர்கள் பிறரிடத்து ஒருபோதும் தீமை புரியக் கூடாது. ( பிறருக்குத் தீமை செய்தால் கண்டிப்பாக மனக்கவலையால் வருந்தி வாழ நேரிடும் என்பது இதனான் பெறப்பட்டது. ஈண்டு நோய் என்பது மனக்கவலையினையும் அடல் என்பது வருத்துதலையும்ம் குறித்து வந்துள்ளது. )<br />
======================================================<br />
<br />
எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை<br />
வீயாது பின்சென்று அடும். - 207<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> (தவறு செய்த ஒருவன் அதற்காக) எவ்வளவு அடி வாங்கினாலும் அதனின்று தப்பித்துக் கொள்ள முடியும். ஆனால் அவன் செய்த தீவினையின் பயனை அனுபவிப்பதில் இருந்து அவன் தப்பமுடியாது. ( அரசனின் தண்டனையில் இருந்து விடுதலை பெற்றாலும் அறத்தின் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்பது இதனான் பெறப்பட்டது. இது எவ்வாறு என்பதனை அடுத்த குறளில் விளக்குகிறார். எனைப்பகை என்பதில் உள்ள பகையானது பகைத்தல் என்ற வினையின் அடிப்படையில் அமைந்த பெயராகும். பகைத்தல் = அடித்தல். பகையுறுதல் = அடி வாங்குதல். அகராதி காண்க. )<br />
=====================================================<br />
<br />
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை<br />
வீயாது அடிஉறைந் தற்று. - 208<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> தனது அடியில் உறைகின்ற நிழலைப் போலவே தீமை செய்தவர் இறக்கும்வரையிலும் அவரைத் துன்பமானது தொடர்ந்து கொண்டே இருக்கும். <br />
=================================================<br />
<br />
தன்னைத்தான் காவல னாயின் எனைத்தொன்றும்<br />
துன்னற்க தீவினைப் பால். - 209<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> (துன்பங்களில் இருந்து) ஒருவன் தன்னைத் தானே காத்துக்கொள்ள விரும்பினால் அதற்கு ஒரே வழி, பிறர்க்குத் தீமை பயக்கின்ற எச் செயலையும் செய்யக்கூடாது. ( காதலனாயின் என்று வருவது பாடபேதம். ) <br />
====================================================<br />
<br />
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்<br />
தீவினை செய்வான் எனின். - 210<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> ஒருவன் தனக்கு வரும் செல்வத்தைக் கருதி பிறர்க்குத் தீமை செய்வானேல், அவன் என்றும் நீங்காத வறுமைநிலையே அடைவான் என்று அறிக. ( அருங்கேடன் = நீங்குதற்கரிய வறுமையினை உடையவன். கேடில்லாதவன் என்று பொருள் கொள்வது இங்கு பொருந்தாது. காரணம், அவ்வாறு பொருள் கொள்வதே ஆசிரியரின் நோக்கம் என்றால் கேடிலி என்று கூறியிருக்கலாம். அதுமட்டுமின்றி, தீவினை செய்யான் என்று கூறினாலே போதுமானதாயிருக்க, மருங்கோடி என்று கூறுவதும் தேவையற்றுப் போகிறது. எனவே தீவினை செய்வான் என்று வருவதே பொருத்தமாகப் படுகிறது. செய்யான் என்று வருவது பாடபேதம். மருங்கு = செல்வம். ஓடுதல் = கருதுதல். அகராதி காண்க. ) <br />
===========================xxxxxx====================</div>
பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6426891971121076187.post-53734468814780046412013-11-14T12:48:00.000+05:302013-11-14T13:08:29.440+05:30அழுக்காறாமை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து<br />
அழுக்காறு இலாத இயல்பு. - 161<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> ஒருவன் தன் நெஞ்சத்தில் பொறாமை எண்ணம் தோன்றாத வரையிலும் தான் ஒழுக்கமாகவே இருப்பதாகக் கருதலாம். ( ஆம், உள்ளத்தில் பொறாமை தலைதூக்கிவிட்டால் அவனது செயலில் அறம் இருக்காது. ஆகவே தான் ஒழுக்கம் கெடும் என்கிறார். )<br />
======================================================<br />
<br />
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்<br />
அழுக்காற்றின் அன்மை பெறின். - 162<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> எவரிடத்திலும் எச் சூழலிலும் பொறாமை கொள்ளாத குணம் ஒருவனிடத்து உள்ளதென்றால் அதைவிட சிறந்த செல்வம் வேறு இல்லை. ( இதனான் பொறாமை அற்றவன் வறியவனாகவே இருந்தாலும் அவனிடத்தில் உள்ள நற்பண்புகளால் பொருட்செல்வம் தானே பெருகும் என்றார். )<br />
=====================================================<br />
<br />
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்<br />
பேணாது அழுக்கறுப் பான். - 163<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> பிறரது உயர்வினைக் கண்டு பொறாமை கொள்பவனின் அறிவும் செல்வமும் தாமே அழியும். ( பொறாமையானது முதலில் ஒருவனது அறிவை அழிக்கிறது. அறிவில்லாமல் செய்யும் செயல்களால் அவனது செல்வமும் நாளடைவில் அழிகிறது. இங்கு அறன் = அறிவு. ஆக்கம் = செல்வம். அகராதி காண்க. )<br />
==================================================<br />
<br />
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்<br />
ஏதம் படுபாக்கு அறிந்து. - 164<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> வழுக்கு நிலத்தில் நடந்தால் உண்டாகும் துன்பங்களை அறிந்த சான்றோர் பிறர்மேல் பொறாமை கொண்டு தீமை செய்யமாட்டார்கள். ( இங்கு பொறாமைக் குணத்தினை வழுக்கு நிலத்துடன் ஒப்பிடுகிறார் வள்ளுவர். ஏனென்றால் வழுக்கு நிலமானது அதில் நடக்க முற்படுவோரை கீழே விழவைப்பதுடன் மீண்டும் எழமுடியாமல் செய்து விடும் தன்மையது. அதைப் போலவே பொறாமைக் குணமும் ஒருவனை அவன் எவ்வளவு உயரிய நிலையில் இருந்தாலும் விழ வைத்து மீண்டும் எழமுடியாத நிலைக்குத் தள்ளிவிடும். இதை சான்றோர்கள் அறிவர் என்பதால் ஒருபோதும் பொறாமை கொள்ளமாட்டார். இங்கு இழுக்குதல் = வழுக்குதல். இழுக்காறு = வழுக்குப்பாதை, வழுக்கு நிலம். அகராதி காண்க. )<br />
================================================<br />
<br />
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்<br />
வழுக்கியும் கேடீன் பது. - 165<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> எதிரிகளிடம் இருந்து ஒருவன் தப்பிப் பிழைத்தாலும் அவன் கொண்ட பொறாமைக் குணமானது தப்பாமல் அவனைக் கொல்லும். <br />
===============================================<br />
<br />
தொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்<br />
உண்பதூஉம் இன்றிக் கெடும். - 166<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> பிறர் அணியும் ஆடை அணிகலன்களைக் கண்டு ஒருவன் பொறாமை கொண்டால் அது ( அவனை மட்டுமின்றி ) அவனது குடும்பத்தார் அனைவரையும் உடுக்க உடையில்லாத உண்ண உணவில்லாத வறுமை நிலைக்குத் தள்ளிவிடும். ( பொதுவாக ஒருவர் அணிகின்ற ஆடை மற்றும் நகைகளைக் கண்டுதான் மற்றவருக்குப் பொறாமை எழத் துவங்குகிறது இல்லையா?. அதனால் தான் இங்கு 'தொடுப்பது' என்று கூறுகிறார் வள்ளுவர். இங்கு தொடுத்தல் = அணிதல். தொடுப்பது = அணிவது. அகராதி காண்க. கொடுப்பது என வருவது பாடபேதம். )<br />
================================================<br />
<br />
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்<br />
கவ்வையே காட்டி விடும். - 167<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> பேராசையினால் பொறாமைகொண்டு திரியும் ஒருவனை அவனது மனைவியின் ஆரவார ( சண்டை) ஒலியே காட்டிக் கொடுத்துவிடும். ( இது எவ்வாறென்றால் பொறாமைக் குணமானது ஒருவனது மன நிம்மதியினைக் குலைப்பதுடன் அவனது உடல்நலத்தினையும் பாதிக்கிறது. இதனான் அவனது குடும்பத்தில் வறுமை தலைதூக்குகிறது. இதன் விளைவு அவனுடைய மனைவி அவனுடன் சண்டை போடத் துவங்குகிறாள். இங்கு கவ்வை = ஆரவார ஒலி. செய்யவள் = இல்லாள், மனைவி. <a href="http://thiruththam.blogspot.in/2011/01/blog-post.html" target="_blank">செய்யவள் தவ்வை</a> ஆய்வுக் கட்டுரை காண்க. தவ்வையை என வருவது பாடபேதம். )<br />
==================================================<br />
<br />
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்<br />
தீயுழி உய்த்து விடும். - 168<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> பொறாமை எனப்படும் ஒரு எண்ணம் ஒருவனிடத்தே தோன்றி நிலைக்குமேயானால் அது அவனது பெருமைகள் அனைத்தையும் அழிக்கவல்ல தீய வழியில் அவனைச் செலுத்திவிடும். ( எனவே பொறாமை எண்ணம் ஒருவருக்குத் தோன்றும்போது தனது பெருமைகளை நினைத்துப் பார்த்து அவர் அவ் எண்ணத்தை உடனே கைவிட வேண்டும் என்கிறார். இங்கு திரு = சிறப்பு, பெருமை. பாவித்தல் = எண்ணுதல் ---> பாவி = எண்ணம். அகராதி காண்க. )<br />
=================================================<br />
<br />
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்<br />
கேடும் நினைக்கப் படும். - 169<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> பொறாமைக்குணம் உடையவனின் செல்வமும் அதில்லாதவனின் வறுமையும் விதியினால் தீர்மானிக்கப்படும். ( இதற்கு முன்னர் சொன்ன குறள்களில் பொறாமைக் குணம் உடையவன் வறுமையினையும் அதில்லாதவன் செல்வத்தையும் பெறுவான் என்றார். இக் குறளிலோ இக் கருத்துக்கு நேர்மாறாகக் கூறுகிறார். காரணம், விதியாகும். விதி வலிமை மிக்கது. நமது செயல்கள் நல்லதாகவே இருந்தாலும் அதன் பயனைத் தீயதாக்கவும் தீய செயல்களின் பயனை நன்மையாக மாற்றவும் விதியினால் முடியும். விதியைப் பற்றி மேலும் அறிய ' <a href="http://thiruththam.blogspot.in/2013/10/2.html" target="_blank">தீதும் நன்றும் - விதியை வெல்ல முடியும்</a> ' என்ற ஆய்வுக் கட்டுரை காண்க. விதி எப்போதும் தன்னை மறைத்தே வைத்திருப்பதைப் போல விதியைக் குறிக்கும் ஊழ் என்ற சொல்லையும் இக் குறளில் நேரடியாகக் கூறாமல் உய்த்துணர வைத்தார் என்க. இங்கு நினைத்தல் = தீர்மானித்தல். ஆக்கம் = செல்வம். கேடு = வறுமை. அகராதி காண்க. )<br />
=================================================<br />
<br />
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்<br />
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். - 170<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> பொறாமைக் குணத்தினால் பெருமை அடைந்தவர் யாருமில்லை. பொறாமையற்றதால் பெருமை குன்றி சிறுமை அடைந்தாரும் இல்லை. ( பொறாமைக் குணம் உடைய ஒருவன் விதிவசத்தால் செல்வம் பெற முடியுமே ஒழிய ஒருக்காலும் அதனால் அவன் பெருமை அடைய முடியாது. அதேபோல் பொறாமையற்ற ஒருவன் விதிவசத்தால் வறுமைநிலை உற்றாலும் அதனால் அவனது செல்வம் குறையுமே ஒழிய பெருமை குன்றாது என்றார். ) <br />
============================ தமிழ் வாழ்க!=============</div>
பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6426891971121076187.post-72173095400850658692013-10-28T15:48:00.000+05:302013-10-28T15:48:24.985+05:30பொறையுடைமை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை<br />இகழ்வார்ப் பொறுத்தல் தலை. - 151<br /><br /><b>தி.பொ.ச. உரை:</b> கொடிய ஆயுதங்களால் தன்னைக் குத்திக் குழிபறித்த போதும் ஒருவனைத் தாங்கி நிற்கும் பூமி போல கொடிய சொற்களால் தன்னை ஒருவன் தாக்கி வருத்தியபோதும் பதிலுக்கு அவனைத் தண்டிக்காமல் பொறுமை காப்பது தலைசிறந்த பண்பாகும். ( பூமியின் உதவியால் வாழ்கின்ற நாம் பூமியை வெட்டிக் காயப்படுத்தும் போதும் அது பொறுமையாய் இருந்து தனது உதவியைத் தொடர்ந்து செய்கிறது. அதைப்போல நாம் உதவிசெய்த ஒருவர் நம்மையே பதம் பார்க்கும்போதும் நாம் பொறுமைகாத்து அவ் உதவியைத் தொடர்ந்து செய்யவேண்டும் என்கிறார். )<br />======================================================<br /> <br />பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை<br />மறத்தல் அதனினும் நன்று. - 152<br /><br /><b>தி.பொ.ச. உரை:</b> ஒருவர் வரம்புமீறி நடந்துகொண்டாலும் (அவரிடத்து சினம் கொள்ளாமல்) பொறுமையாய் இருப்பது நல்லது. மேலும் அவரது செயலை நினைவில் கொள்ளாமல் மறந்து விடுவது அதைவிட நல்லது. ( காரணம், இவ்வாறு செய்வதன் மூலம் அவருக்கும் நமக்கும் பகை ஏற்படாமல் நட்பு உருவாகும் வாய்ப்புள்ளது என்பதால். )<br />=====================================================<br /><br />இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்<br />வன்மை மடவார்ப் பொறை. - 153<br /><br /><b>தி.பொ.ச. உரை:</b> விருந்தினர்க்கு உணவளிக்க இயலாமையே மிகப் பெரிய வறுமையாகும். அதைப்போல மென்மையானவர்கள் செய்யும் தவறுகளைப் பொறுத்திருப்பதே மிகப் பெரிய வலிமையாகும். ( இங்கு மடவார் = மென்மையானவர்கள், அதாவது பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள். தம்மைவிட மென்மையான இவர்கள் தம்மிடத்து தவறுசெய்யும்பொழுது அவர்களைத் தண்டிப்பது பெரிய வலிமையாகாது. அவர்மீது சினம்கொள்ள முழு அதிகாரமிருந்தும் சினம் கொள்ளாமல் அவர்தம் தவறுகளைப் பொறுத்துச் செல்வதே மிகப் பெரிய வலிமையாகும் என்கிறார். ) <br />===================================================<br /> <br />நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை<br />போற்றி யொழுகப் படும். - 154<br /><br /><b>தி.பொ.ச. உரை</b>: தம்மிடத்துள்ள சிறந்த அறிவு தம்மைவிட்டு நீங்காதிருக்க விரும்பினால் ஒருவர் பொறுமையினையே தனது முதன்மை ஒழுக்கமாகக் கொண்டு செயல்புரிய வேண்டும். ( அதாவது ஒருவர் பொறுமை இழந்து சினம் கொள்ளும்பொழுது அவரது அறிவு தடுமாறி தனது பெருமைக்கு ஒவ்வாத செயலில் ஈடுபடத் துவங்குகிறார். இதைத்தான் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று கூறுகின்றனர். இங்கு நிறை = அறிவு. அகராதி காண்க. ) <br />==================================================<br /><br />ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்<br />பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. - 155<br /><br /><b>தி.பொ.ச. உரை</b>: துன்பங்களைப் பொறுக்காமல் சினம் கொண்டு தண்டிக்கும் பண்புடையவரை உலகத்தார் ஒருபொருளாகவே கருதமாட்டார். ஆனால் எவ்வளவு தீங்கு செய்தாலும் பொறுமை காக்கின்றவர்களைப் பொன்னாகப் பொதிந்துவைத்துப் போற்றுவர். ( இது எவ்வாறெனின், சூடேற்றும்பொழுது கொதிக்கின்ற தன்மையுடைய ஒரு நீர்மமானது சிறிது நேரத்தில் ஆவியாகி ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. ஆனால் எவ்வளவு சூடாக்கினாலும் அதைப் பொறுத்துக்கொண்டு ஒளிர்கின்ற பொன்னை மக்கள் விரும்பித் தம்முடன் பொதிந்துவைத்துக் கொண்டு போற்றுகின்றனர் அன்றோ.! )<br />=====================================================<br /> <br />ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்<br />பொன்றுந் துணையும் புகழ். - 156<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> தெரிந்தே துன்பம் செய்தவருக்கு அந்த ஒருபொழுது வேண்டுமானால் இன்பம் தருவதாய் இருக்கலாம். ஆனால் அத் துன்பத்தைப் பொறுத்தவரோ இந்த உலகம் அழியும்வரை அழியாத புகழ் பெறுவர். ( இதற்கு சான்றாக காந்தியடிகளைக் காட்டலாம். காந்தியை சுட்டுக் கொன்றதன் மூலம் கோட்சே அந்த ஒருபொழுதில் மகிழ்ந்திருக்கலாம். ஆனால் தன்னை சுட்ட கோட்சேவை யாரும் தாக்காமல் பாதுகாத்து அவரை மன்னித்து விட்டதனால் மோகன்தாஸ் காந்தி இன்றுவரை மக்கள் உள்ளத்தில் மகாத்மா காந்தியாய் உயர்ந்து நிற்கிறார். இங்கு ஒறுத்தல் = வருத்துதல். நாள் = காலம், பொழுது. அகராதி காண்க. )<br />======================================================<br /> <br />திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து<br />அறனல்ல செய்யாமை நன்று. - 157<br /><br /><b>தி.பொ.ச. உரை:</b> நேர்மையற்ற முறையிலே பிறர் நம்மிடத்தில் நடந்து கொண்டால் பொறுமை காக்க வேண்டுமே ஒழிய உள்ளம் அழிந்து நாமும் நேர்மையற்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. ( இதனால் நேர்மையற்று நடந்து கொண்டவர் தனது தவறை உணர்வதற்கும் திருந்துவதற்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்கிறார். அவ்வாறு அல்லாமல் பதிலுக்கு நாமும் நேர்மையற்று நடந்துகொண்டால் இருவருமே தவறு செய்தவர்களாவதுடன் சமுதாய ஒழுக்கமும் கட்டுப்பாடும் முற்றிலும் சிதையத் துவங்கி விடும். இங்கு திறன் = நேர்மை. நோதல் = சிதைதல், அழிதல். அகராதி காண்க. )<br />======================================================<br /> <br />மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்<br />தகுதியான் வென்று விடல். - 158<br /><br /><b>தி.பொ.ச. உரை:</b> செருக்கினால் ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது யார் அதைப் பொறுமையுடன் தாங்கிக்கொண்டு இருக்கின்றாரோ அவரே இறுதியில் வெற்றி பெற்றவராகிறார். ( இதற்கு சான்றாக பூமியைக் கூறலாம். பலவகைகளில் நமக்கு உதவியாய் இருக்கும் பூமியை நாம் குத்துகிறோம்; வெட்டுகிறோம்; குடைகிறோம்; வெடிவைத்துத் தகர்க்கிறோம். இதையெல்லாம் பொறுத்துக் கொள்ளும் பூமிதான் இறுதியில் வெல்கிறது. ஆம், நம் வாழ்நாள் முடிந்ததும் அந்த பூமிக்குள் தான் நாம் அடங்கி விடுகிறோம். )<br />========================================================<br /> <br />துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்<br />இன்னாச்சொல் நோற்கிற் பவர். - 159<br /><br /><b>தி.பொ.ச. உரை</b>: வரம்புமீறி பேசுபவர்களின் தீய சொற்களைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருப்போர் துறவிகளைக் காட்டிலும் மனவலிமை மிக்கவர்கள். ( துறவிகள் முற்றும் துறந்தவர்கள் ஆதலால் அவர்கள் சினத்தையும் துறந்தவர்கள் ஆகின்றனர். அவர்களுக்கு சினமே எழாது. ஆனால் ஒரு இல்லறத்தோன் சினத்தை முழுவதும் துறவாத நிலையில் பொங்கிவரும் சினத்தை அடக்கிக்கொண்டு பொறுமையாக இருப்பதற்கு மிகுந்த மனவலிமை வேண்டும். அதனால் தான் இவ்வாறு கூறுகிறார். இங்கு தூய்மை = வலிமை. )<br />======================================================<br /> <br />உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்<br />இன்னாச்சொல் நோற்பாரின் பின். - 160<br /><br /><b>தி.பொ.ச. உரை:</b> பிறர் கூறுகின்ற கடுஞ்சொற்களைக் கேட்டுப் பொறுமையாக இருக்கின்றவர்கள் உண்ணாமல் நோன்பு இருப்போரைக் காட்டிலும் பெரியராம். ( காரணம், உண்ணா நோன்பு இருப்பதற்கு உடல்வலிமை போதும். ஆனால் இன்னாநோன்பு இருப்பதற்கு மனவலிமை தேவை. உடல்வலிமையைக் காட்டிலும் மனவலிமை மேலானது என்பதால் இவ்வாறு கூறுகிறார் வள்ளுவர். )<br />======================== வாழ்க தமிழ் ! ===================<br /> </div>
பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6426891971121076187.post-1276298022262508252013-10-26T14:11:00.001+05:302013-10-26T14:11:42.528+05:30பிறனில் விழையாமை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து<br />அறம்பொருள் கண்டார்கண் இல். - 141<br /><br /><b>தி.பொ.ச. உரை:</b> அறம் என்பதன் மெய்ப்பொருளைத் தெளிவாகக் கண்ட அறிஞர்களிடத்து பிறரது உடைமையாளாகிய மனைவியை விரும்புகின்ற அறிவின்மை இல்லை. ( பிறரது மனைவியை நேசிக்கும் செயலை அறத்தின் நீங்கிய செயல் என்றார். )<br />====================================================<br /> <br />அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை<br />நின்றாரின் பேதையார் இல். - 142<br /><br /><b>தி.பொ.ச. உரை:</b> பிறர் மனைவியை நேசிப்பவர்கள் (சாதாரண முட்டாள்கள் அல்லர்) அறிவின் கடைக்கோடியில் இருக்கும் அறிவிலிகளைக் காட்டிலும் மிகப் பெரிய முட்டாள்கள் ஆவர். ( இங்கு அறன் = ஞானம், அறிவு. அகராதி காண்க. பிறர் மனைவியை நேசிப்பதுதான் இருப்பதிலேயே மிகப் பெரிய முட்டாள்தனம் என்கிறார். )<br />=====================================================<br /> <br />விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்<br />தீமை புரிந்தொழுகு வார். - 143<br /><br /><b>தி.பொ.ச. உரை:</b> தன்னை மிகவும் நம்பியவரின் மனைவியை விரும்பி அவருக்குத் தீமை புரிகின்றவனை பிணத்திற்கு ஒப்பானவனாகவே கருதவேண்டும். ( ஏனென்றால் மாந்தர்க்கு மானமே உயிராம்; மானங்கெட்ட இச் செயலைச் செய்பவன் உயிரோடிருந்தாலும் பிணத்திற்கு ஒப்பானவனே அன்றோ!. ) <br />=====================================================<br /> <br />எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்<br />தேரான் பிறனில் புகல். - 144<br /><br /><b>தி.பொ.ச. உரை</b>: தினையளவு கூட யோசிக்காமல் பிறர் மனைவியை விரும்புவனிடத்தில் மலையளவு பொருட்களும் பெருமைகளும் இருந்தாலும் அவை அத்தனையும் அழியும். ( இதனான் அறிவாலும் செல்வத்தாலும் பலத்தாலும் புகழ் மிக்கோரும் கூட பிறர் மனைவி மேல் காதல் கொள்ளத் துவங்கினால் தம் பெருமை அனைத்தையும் இழப்பர் என்கிறார். )<br />=====================================================<br /> <br />எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்<br />விளியாது நிற்கும் பழி. - 145<br /><br /><b>தி.பொ.ச. உரை:</b> பிறர் மனைவியை விரும்பி அவரை அடைவது எளிய செயலாகவே ஒருவர்க்குத் தோன்றினாலும் அதனால் அவர்க்கு உண்டாகும் கேட்டிலிருந்து மீள்வதென்பது முடியாத செயலாகும். ( இதிலிருந்து எந்த ஒரு தவறையும் செய்வது எளிது என்பதும் தவறுக்கான தண்டனையில் இருந்து தப்புவதோ கடினமான செயல் என்பதும் பெற்றியாம். )<br />======================================================<br /> <br />பகைபாவம் அச்சம் பழியென நான்கும்<br />இகவாவாம் இல்லிறப்பான் கண். - 146<br /><br /><b>தி.பொ.ச. உரை:</b> பிறர் மனைவிமேல் விருப்பம் கொண்டு சேர்பவனுக்கு அவன் விரும்பாமலே பகை, பாவம், அச்சம், பழி என்ற நான்கும் அவனிடத்து வந்து சேரும். ( இங்கு பகை என்பது அவளது கணவன் மற்றும் அவன் சுற்றத்தாரின் பகை. பாவம் என்பது அறம் நீங்கியதால் வரும் பயன். அச்சம் என்பது பகையினால் வருவது. பழி என்பது பாவத்தினால் வருவது. )<br />====================================================<br /> <br />அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்<br />பெண்மை நயவா தவன். - 147<br /><br /><b>தி.பொ.ச. உரை</b>: பிறன் மனைவி மேல் விருப்பம் கொள்ளாமல் தன் மனைவியை மட்டுமே நயந்து வாழ்க்கை நடத்துபவனே அற வழியில் வாழ்பவனாகிறான். ( இல்லறமல்லது நல்லறமில்லை என்பது ஆன்றோர் வாக்கானாலும் இல்லறத்தில் இருந்துகொண்டே பிறன்மனை நோக்கினால் அந்த இல்லறம் நல்லறம் அல்ல என்கிறார். )<br />====================================================<br /> <br />பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு<br />அறனன்றோ ஆன்ற வொழுக்கு. - 148<br /><br /><b>தி.பொ.ச. உரை:</b> பேராண்மை என்பது யாதெனின் அது பிறர் மனைவியை விரும்பாத பண்பேயாகும். அதுவே சான்றோருக்குப் பெருமை சேர்க்கின்ற அற ஒழுக்கமாகும். ( ஒரு பெண்ணை ஆளுவதையே ஆண்மை என்றும் பல பெண்களை ஆளுவதே பேராண்மை என்றும் தவறாகப் பொருள் கொண்டோர் பலர் உள்ளனர். அவர்கள் இக் குறளை முதலில் படித்து திருந்துவராக. ) <br />===================================================<br /> <br />நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்<br />பிறர்க்குரியாள் தோள்தோயா தார். - 149<br /><br /><b>தி.பொ.ச. உரை</b>: கடல்நீர் சூழ்ந்த இவ் உலகில் அனைத்து நன்மைகளையும் பெறுவதற்குத் தகுதியானவர் யாரென்றால் அவர் பிறரது மனைவியின் மையுண்ட கண்களை காம விருப்பத்துடன் நோக்காதவரே ஆவார். ( இங்கு நாமநீர் வைப்பு என்பதின் மூலம் கடல்நீர் சூழ்ந்த இவ் உலகத்தையும் பெண்ணின் மையுண்ட கண்களையும் ஒருங்கே குறித்தார் என்க. தோள் என்பது கண்ணையும் தோள்தோய்தல் என்பது கண்ணோடு கண் பார்த்தலையும் குறிக்கும். தோள் என்றால் என்ன? ஆய்வுக் கட்டுரை காண்க.)<br />=====================================================<br /> <br />அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்<br />பெண்மை நயவாமை நன்று. - 150<br /><br /><b>தி.பொ.ச. உரை:</b> அறநெறியினின்று விலகி பிற மக்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் பிறன் மனைவியை விரும்பாதிருப்பது நன்றே. ( காரணம், பிறன்மனை நோக்குவதால் விளையும் கேட்டில் இருந்து மீள முடியாது என்பதால். இதனான் பிறன் மனை நோக்குதல் பெரும்பாவம் என்பது வலியுறுத்தப்பட்டது. )<br />===================== வாழ்க தமிழ் ! =================<br /> </div>
பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6426891971121076187.post-60615434301310037412013-10-25T20:31:00.001+05:302013-10-25T20:31:38.313+05:30ஒழுக்கமுடைமை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்<br />உயிரினும் ஓம்பப் படும். - 131<br /><br /><b>தி.பொ.ச. உரை:</b> ஒழுக்கமானது (அதைப் பேணுபவருக்கும் பேணப்படுபவருக்கும்) நன்மையினைத் தரக்கூடியது என்பதால் அவ் ஒழுக்கத்தினை அனைத்து உயிர்களிடத்திலும் தவறாமல் பேண வேண்டும். ( அதாவது ஒழுக்கத்துடன் நாம் ஒருவரிடத்தில் நடந்துகொண்டால் அவரும் ஒழுக்கத்துடனே நம்மிடத்தில் நடந்து கொள்வார். இதனான் இருவருக்கும் நன்மையே கிடைக்கும் என்றார். இங்கு ' உயிரினும் ' என்பது ' அனைத்து உயிரின்கண்ணும் ' என்ற பொருளில் வந்துள்ளது. )<br />=======================================================<br /><br />பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்<br />தேரினும் அஃதே துணை. - 132<br /><br /><b>தி.பொ.ச. உரை:</b> எந்த சூழ்நிலையிலும் ஒழுக்கத்தை விரும்பிப் பேணவேண்டும். ஏனென்றால் துணையாய் இருந்து நம் உயிரினைக் காப்பது அவ் ஒழுக்கமே என்பது சான்றோர் துணிபாகும். <br />======================================================<br /><br />ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்<br />இழிந்த பிறப்பாய் விடும். - 133<br /><br /><b>தி.பொ.ச. உரை:</b> ஒழுக்கம் உடையவனே குடிமகன் ஆவான். ஒழுக்கம் தவறி நடப்பவன் குடிமகனாகும் தன்மையினின்று இழிந்த கீழ்மகன் ஆவான். ( அதாவது தான் வாழும் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதே ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். இதைச் செய்வதற்கு அவனுக்கு உதவியாய் இருப்பது அவனது ஒழுக்கமே ஆகும். இந்த ஒழுக்கத்தினின்று அவன் தவறும்பொழுது நாட்டில் குடிமகனாய் வாழும் தகுதியை இழந்து காட்டில் வாழும் விலங்கினையொத்த கீழ்மகன் ஆகின்றான். )<br />======================================================<br /> <br />மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்<br />சிறப்பொழுக்கங் குன்றக் கெடும். - 134<br /><br /><b>தி.பொ.ச. உரை:</b> (தனது துறைசார்ந்த அறிவினால் சிறப்பு பெற்ற) ஒரு ஆசிரியர் தனது துறைசார்ந்த அறிவை மறந்தாலும் மறுபடியும் கற்றுக் கொள்ளலாம். ( அதனால் அவர் பெருமை குறையுமே தவிர முற்றும் அழியாது. ) ஆனால் அவர் தனது ஒழுக்கம் குன்ற அதாவது ஒழுக்கத்தை மறந்து நடப்பாராயின் அவரது பெருமை முற்றும் அழியும். ( இங்கு பார்ப்பான் என்று எந்த வருணத்தாரையும் வள்ளுவர் குறிப்பிடவில்லை என்று அறிக. துறை சார்ந்த அறிவில் சிறப்பு பெற்றவர்கள் அத் துறையின் மேற்பார்வையாளராக அல்லது ஆசிரியராக விளங்குவது இயல்பு. இங்கு பார்த்தல் = மேற்பார்வையிடுதல், மதிப்பிடுதல். அகராதி காண்க. இதனின்று பார்ப்பான் = மேற்பார்வையிடுபவன், மதிப்பிடுபவன், ஆசிரியன் என்றும் வரும். சிறப்பு என வருவது பாடபேதம். )<br />======================================================<br /> <br />அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை<br />ஒழுக்க மிலான்கண் உயர்வு. - 135<br /> <br /><b>தி.பொ.ச. உரை:</b> பொறாமை உடையவன் நல்ல செயல்களைச் செய்யமாட்டான். அதைப்போல ஒழுக்கமில்லாதவனும் பிறர் போற்றத்தக்க உயர்வான செயல்களைச் செய்ய மாட்டான். ( இதனான் பொறாமை கொள்பவனின் ஒழுக்கமும் கெடும் என்பதுடன் ஒருவர் மீது ஏற்படும் பொறாமையே நம் ஒழுக்கம் கெடப்போவதற்கான அறிகுறி என்பதும் பெறப்படுகிறது. )<br />=====================================================<br /> <br />ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்<br />ஏதம் படுபாக் கறிந்து. - 136<br /><br /><b>தி.பொ.ச. உரை</b>: ஒழுக்கம் தவறி நடத்தலால் வரும் கேட்டினை அறிந்து ஒருபோதும் ஒழுக்கத்தினின்று விலகாதிருப்பது உள்ளத்தில் ஊக்கமுடையவர்களின் பண்பாகும். ( இதனான் மனதில் உறுதி உள்ளவரை மட்டுமே ஒழுக்கம் தவறாமல் நடக்க இயலும் என்பதும் மனவலிமை குன்றும்போது ஒழுக்கம் மீறப்படுகிறது என்பதும் பெறப்படுகிறது. ஏதம் = கேடு. உரவோர் = ஊக்கமுடையோர், மனவலிமையுடையோர். ஒல்குதல் = சாய்தல், விலகுதல். அகராதி காண்க. )<br />========================================================<br /> <br />ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்<br />எய்துவர் எய்தாப் பழி. - 137<br /><br /><b>தி.பொ.ச. உரை</b>: ஒழுக்கத்தைப் பேணி நடப்பவர்கள் என்றுமே நீங்காத மேன்மையினைப் பெறுவர். ஒழுக்கம் தவறி நடப்பவர்கள் என்றுமே நீங்காத பழியினைப் பெறுவர். ( எய்துதல் = பெறுதல், நீங்குதல். அகராதி காண்க. எய்துவர் = பெறுவர். எய்தா = நீங்காத. எய்தா என்பதனை மேன்மையுடனும் பழியுடனும் கொண்டுகூட்டிப் பொருள் கொள்க. )<br />=====================================================<br /><br />நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்<br />என்றும் இடும்பை தரும். - 138<br /><br /><b>தி.பொ.ச. உரை</b>: நன்மை என்னும் பயிர் விளைய நல்லொழுக்கம் என்னும் நல்லநீரைப் பாய்ச்ச வேண்டும். மாறாக, தீயொழுக்கம் என்ற கெட்டநீரைப் பாய்ச்சினால் கேடு எனும் பயிரே என்றும் விளையும். ( இங்கு வித்து = நீர். ' வித்தும் இடல் வேண்டும் கொல்லோ? ' ஆய்வுக் கட்டுரை காண்க. பயிர்களுக்கு நாம் பாய்ச்சும் நீரின் தன்மையைப் பொறுத்தே பயிரின் விளைச்சல் அமைகிறது என்பதை அறிவோம். நல்லநீரைப் பாய்ச்சாமல் கெட்ட நீரைப் பாய்ச்சினால் பயிர்கள் கெட்டு மடிந்து விளைச்சலற்றுப் போகும் என்பதையே கேடு விளையும் என்கிறார். இங்கு ஒழுக்கத்தினை நீருடன் ஒப்பிட்டிருப்பது சாலப் பொருத்தமாகவே படுகிறது. ஏனென்றால் இந்த இரண்டுமே ஒழுகும் தன்மை உடையவை என்பதுடன் இடத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளவும் வல்லவை. ) <br />======================================================<br /> <br />ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய<br />வழுக்கியும் வாயாற் சொலல். - 139<br /><br /><b>தி.பொ.ச. உரை:</b> ஒழுக்கம் தவறாமல் நடப்பவர்கள் தவறியும் தீய சொற்களை உண்மையாகப் பேச மாட்டார்கள். அவர்களால் அப்படிப் பேசவும் முடியாது. ( இங்கு வாய் = உண்மை. வாயால் = உண்மையால் அதாவது உண்மையாக. வாயால் சொலல் = உண்மையாகப் பேசுதல் அதாவது சொல்லிய ஒரு பொய்யை உண்மையாக்க மேலும் மேலும் பல பொய்களைப் பேசுதல். பொய்மையும் வாய்மையிடத்த என்று ஏற்கெனவே வள்ளுவர் கூறியிருப்பதால் ஒழுக்கமானவர்களும் புரைதீர்ந்த நன்மை பயக்குமிடத்து பொய் பேசுவார்கள் என்று கொள்ளலாம். ஆனால் அவர்கள் ஒருபோதும் தாம் கூறிய அப் பொய்யினை உண்மையாக்க முயலமாட்டார்கள். காரணம், பொய்பேசிப் பழக்கமில்லை ஆதலால் அவர்களால் அதைச் செய்யவும் முடியாது என்கிறார். )<br />===================================================<br /> <br />உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்<br />கல்லார் அறிவிலா தார். - 140<br /><br /><b>தி.பொ.ச. உரை:</b> ஒழுக்கமிருந்தால் தான் உலகம் நம்முடன் ஒட்டும். ஒழுக்கமில்லாவிட்டால் உலகம் ஒட்டாது. இதை அறியாதவன் என்ன கற்றிருந்தும் மூடனே ஆவான். ( ஆம், ஒழுக்கத்துடன் நடந்து கொள்பவரை அனைவரும் விரும்பி அவருடன் பழகுவர். ஒழுக்கமின்றி நடந்து கொள்பவனைக் கண்டால் யாருக்கும் பிடிக்காது. யாரும் அவனை அண்டவும் மாட்டார்கள். இதனை அறியாதவன் என்ன கற்றிருந்தும் மூடன் தானே!. ) <br />=================== வாழ்க தமிழ்!==========================<br /> </div>
பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6426891971121076187.post-5407134600669846842013-10-24T14:52:00.001+05:302013-10-24T15:07:12.312+05:30நடுவுநிலைமை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்<br />
பாற்பட்டு ஒழுகப் பெறின். - 111<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> வேறுபாடுகளின் நடுவாக நின்று செயல்படும் ஆற்றலை ஒருவர் பெற்றிருப்பின் அதுவொன்றே அவருக்கு நல்ல தகுதி எனப்படும். ( இங்கு வேறுபாடுகள் என்பது தன்குடும்பம், உறவினர், நண்பர், பகைவர் போன்ற உறவுமுறை வேறுபாடுகளையும் ஏழை, பணக்காரன் போன்ற பொருளாதார நிலை வேறுபாடுகளையும் இன்னபிற வேறுபாடுகளையும் குறிப்பதாகக் கொள்ளலாம். இந்த வேறுபாடுகளின் ஒருபக்கமாக சாய்ந்துவிடாமல் நடுவாக நின்று செயலாற்றுவதே ஒரு நல்ல மனிதருக்கான சிறந்த தகுதி என்கிறார். இன் என்னும் வேற்றுமை உருபுக்கு பதிலாக ஆல் என்னும் உருபு மயங்கி வந்துள்ளது. பகுதி = வேறுபாடு. பால் = நடு, மையம். பால்படுதல் = நடுவுநிற்றல். அகராதி காண்க.)<br />
=======================================================<br />
<br />
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி<br />
எச்சத்திற் கேமாப்பு உடைத்து. - 112<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> நேர்மையாக வாழும் ஒருவருடைய செயல்கள் (அவர் மறைந்தாலும் தாம்) அழியாமல் நின்று அவரது பரம்பரையையும் காத்து நிற்கும். ( இது எவ்வாறெனின், ஒருவரது நேர்மையால் மகிழ்ச்சியாக வாழ்ந்தோர் அவரது பரம்பரையினர் துன்புற்றவுழிக் கைவிடாமல் காத்து நிற்பர் என்பதாம். ஆக்கம் = செயல். ) <br />
======================================================<br />
<br />
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை<br />
அன்றே யொழிய விடல். - 113<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> நேர்மையற்ற செயலினால் ஒருவருக்கு நல்ல பொருளும் நல்ல பெயரும் கிடைப்பதாகவே இருந்தாலும் அச் செயலை அப்பொழுதே கைவிடல் வேண்டும். ( ஏனென்றால் அப்படிக் கிடைத்த செல்வமும் பெயரும் நீண்ட நாள் நிலைத்து நிற்காது என்பதுடன் தனக்குப்பின் தனது பரம்பரையினையே அது பாதிக்கும் என்பதால். ஆக்கம் = செயல். )<br />
=======================================================<br />
<br />
தக்கார் தகவிலர் என்பது அவரவர்<br />
எச்சத்தாற் காணப்ப படும். - 114<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> ஒருவர் நேர்மையானவராய் வாழ்ந்தாரா இல்லையா என்பதை அவரது பரம்பரையினரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ( ஆம், குறள் 112 ல் கூறியபடி, நேர்மையோடு ஒருவர் வாழ்ந்திருந்தால் அது அவரது பரம்பரையை எளிமையாக வாழவைத்தாலும் அழியவிடாமல் காத்திருக்கும். நேர்மையற்று வாழ்ந்தவரின் பரம்பரையோ பேராசையால் கெட்டு அழிந்திருக்கும். )<br />
=======================================================<br />
<br />
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்<br />
கோடாமை சான்றோர்க் கணி. - 115<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> சான்றோருக்கு அழகு சேர்க்கும் உண்மையான அணிகலன் அவரது நேர்மையான நெஞ்சம் மட்டுமே; ஏனென்றால் அவரது பிற அணிகலன்களுக்குத் தேய்வும் வளர்ச்சியும் இல்லாமல் இல்லை. ( இதன்மூலம் நேர்மையானவர்கள் ஈட்டிய பொருள் தேயலாம்; பெருகலாம். ஆனால் அவர்கள் ஈட்டிய நற்பெயர் ஒருநாளும் மாறுவதில்லை என்கிறார். ) <br />
======================================================<br />
<br />
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்<br />
நடுவொரீஇ அல்ல செயின். - 116<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> நேர்மையற்ற செயலைச் செய்ய நெஞ்சம் விழையும்போது இதனால் தனக்குக் கேடு வரும் என்று அந் நெஞ்சத்திற்கு அறிவுறுத்துங்கள். ( இதனான் தவறான வழியில் பொருள் சேர்க்க ஆசை உண்டாகும் போது அதனால் வரும் துன்பத்தினை நினைத்துப் பார்க்க அந்த ஆசை மறையுமென்றார். )<br />
======================================================<br />
<br />
கெடுவாக வையாது உலகம் நடுவாக<br />
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. - 117<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> நேர்மையான முறையில் நல்லதை மட்டுமே செய்கின்ற ஒருவரின் எளிமையான வாழ்வினைக் கண்டு ' அவர் வறுமையுற்றார் ' என்று உலகம் இகழாது. ( பொதுவாக நேர்மையானவர்கள் வாழ்க்கையில் அதிகப் பொருள் சேர்க்க இயலாது. இதனால் அவர்கள் எளிமையாகவே வாழ்வர். இதை வறுமை நிலை என்று இகழாமல் உயர்ந்த நிலையாகவே உலகம் போற்றும் என்கிறார். காரணம், இந்த எளிய வாழ்க்கை முறை தான் அவர்கள் நேர்மையானவராய் வாழ உதவி செய்கிறது. நெஞ்சத்தில் ஆடம்பரம் தலைதூக்கிவிட்டால் நேர்மையாக வாழ்வது கேள்விக்குறி ஆகிவிடுமன்றோ!. தாழ்வு = அடக்கம், பணிவு, எளிமை. கெடு = வறுமை. அகராதி காண்க. ) <br />
=======================================================<br />
<br />
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்<br />
கோடாமை சான்றோர்க் கணி. - 118<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> ஒருபொருளின் நிறைகாணும் பொழுது சமநிலையில் இருக்கவல்ல பண்பே ஒரு துலாக்கோலுக்குப் பெருமை தருகிறது. அதைப்போல ஒரு சான்றோரின் நிறைகாணும் பொழுது அவரது நேர்மையாய் இருக்கவல்ல பண்பே அவருக்குப் பெருமையைத் தருகிறது. <br />
=======================================================<br />
<br />
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா<br />
உட்கோட்டம் இன்மை பெறின். - 119<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> மாறுபாடற்ற சொற்களே ஒருவரது நேர்மையைக் காட்டிவிடும். ஏனென்றால் அவரது நேர்மையான நெஞ்சத்தின் வெளிப்பாடே அவை. ( அதாவது ஒருவரின் உள்ளத்தில் நேர்மை இல்லாவிட்டால் அது அவரது சொல்லின் மூலம் கண்டிப்பாக வெளிப்பட்டு விடும் என்கிறார். இதை வைத்து அவரது நம்பகத் தன்மையை நாம் அறிந்து கொள்ள முடியும் என்கிறார். கோட்டம் = மாறுபாடு, விலகல். )<br />
=====================================================<br />
<br />
வாணிகம் செய்வார்க்கு வாணிகன் பேணிப்<br />
பிறவும் தமபோல் செயின். - 120<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> பொருள் வாங்குவோர்க்குத் துலாக்கோலால் எடைபோட்டுக் கொடுப்பதில் மட்டுமே நேர்மை என்றில்லாமல் (அப் பொருளுடன் தொடர்புடைய) பிறவற்றிலும் நேர்மையினையே கடைப்பிடிக்க வேண்டும். ( இங்கு பொருளுடன் தொடர்புடைய பிற என்பது பொருளின் தரம், பொருளின் விலை போன்றவையாம். சரியாக எடைபோட்டுக் கொடுத்தால் மட்டும் நேர்மை ஆகாது; ஆளைப்பார்த்து விலை சொல்வதும், பொருளின் தரத்தை மாற்றுவதும் நேர்மையான செயலன்று என்கிறார். வாணிகம் = வியாபாரம். வாணிகன் = துலாக்கோல். வாணிகன் பேணுதல் = துலாக்கோலை சரியாக நிறுத்தல். அகராதி காண்க. ) <br />
===================== வாழ்க தமிழ்! ===================== </div>
பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6426891971121076187.post-56974197166204546292013-10-23T16:48:00.000+05:302013-10-23T16:49:51.672+05:30செய்ந்நன்றி அறிதல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்<br />
வானகமும் ஆற்றல் அரிது. - 101<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> (தான் முன்பு ஒருபோதும்) உதவியிராதபொழுதும் தனக்கு ஒருவர் செய்யும் உதவிக்கு இந்த பூமி செய்யும் உதவியும் பசு செய்யும் உதவியும் ஒப்பாக முடியாது. (இது எவ்வாறென்றால், வெயிலில் காய்ந்து கிடக்கும் பூமி கூட உழுது வித்தி நீர் பாய்ச்சி குளிர்வித்து உதவினால் தான் நமக்கு விளைச்சலைத் தருகிறது. அதைப்போல பசுவும் புல்லைக் கொடுத்தால் தான் நமக்குப் பாலே தருகிறது. வானகம் = வான் +அகம் = பால் + உடையது = பசு. அகராதி காண்க.)<br />
===========================================================<br />
<br />
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்<br />
ஞாலத்தின் மாணப் பெரிது. - 102<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> துன்புறும் காலத்திலே ஒருவர் நமக்குச் செய்யும் உதவி மிகச் சிறிதாகவே இருந்தாலும் உண்மையில் அவ் உதவியானது இந்த உலகத்தை விட மிகப் பெரியதே ஆகும். ( இது எவ்வாறென்றால், மழையற்ற வறட்சிக் காலத்தில் நாம் உணவின்றித் துன்புறும் போது அந்த பூமி கூட நமக்கு விளைச்சலைத் தந்து உதவுதில்லை. அப்போது நமக்கு உணவளித்து நம் உயிரைக் காப்பவர் பூமியினும் பெரியவர் அன்றோ!) <br />
===========================================================<br />
<br />
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்<br />
நன்மை கடலின் பெரிது. - 103<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> கைம்மாறு கருதாமல் ஒருவர் செய்யும் உதவியினை சீர்தூக்கிப் பார்த்தால் அதன் நன்மையானது இந்தக் கடலை விட பெரியதாகும். ( இதற்கு சான்றாக மேகங்களைக் கூறலாம். கடலில் இருந்து ஆவியாகி மேலே போன மேகங்கள் நன்றிக்கடனாக கடலுக்கு மட்டுமே மழைநீரைப் பொழிவதில்லை. கடல் சூழ்ந்த நிலத்திற்கும் கைம்மாறு கருதாமல் மழைநீரைத் தந்து உதவுகிறது.)<br />
============================================================<br />
<br />
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்<br />
கொள்வர் பயன்தெரி வார். - 104<br />
<br />
<b>தி.பொ.ச. உரை</b>: ஒருவர் செய்த உதவியானது தினைபோல (குறுகியகாலப்) பயன் தருவதேயாயினும் அதன் பயனை அனுபவித்தவர்கள் உதவி செய்தவருக்கு பனைமரம் போல (பல்லாண்டு காலம்) நன்றி உடையவராய் இருக்க வேண்டும். ( ஒருவர் கொடுத்த உதவிப் பொருளானது தினைப்பயிர் போல குறுகிய காலம் மட்டுமே நமக்கு நன்மை செய்தாலும் நன்மை தரும் அக்காலம் முடிந்ததும் நமக்கு உதவி செய்தவரை உடனே மறந்துவிடல் ஆகாது; அவர் செய்த உதவியை ஒரு பனைமரத்தின் ஆயுட்காலம் போல பல்லாண்டு காலம் நினைவில் கொண்டு அவருக்கு நன்றி உடையவராய் இருக்க வேண்டும் என்கிறார். )<br />
============================================================<br />
<br />
உதவி வரைத்தன்று உதவி உதவி<br />
செயப்பட்டார் சால்பின் வரைத்து. - 105<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> ஒருவருக்கு நாம் செய்யும் உதவியின் பெருமையானது நாம் கொடுத்து உதவும் பொருளின் அளவினைப் பொறுத்து அமையாமல் அவ் உதவியைப் பெற்றோரின் மனநிறைவினைப் பொறுத்து அமைவதாகும். ( ஒருவருக்கு நாம் எவ்வளவு பெரிய உதவிகளை செய்தாலும் அவற்றால் அவருக்கு மனநிறைவு ஏற்படவில்லையெனில் அவ் உதவிகள் அளவால் பெரியதாய் இருந்தாலும் பயனால் மிகச் சிறியவையே என்கிறார். பல்வேறு உதவிகளில் பசிக்கு உணவிடும் உதவி ஒன்றே உதவியைப் பெற்றவருக்கு போதும் என்ற மனநிறைவினைத் தருவதினால் தான் விருந்தோம்பல் தலையாய உதவியாகக் கருதப்பட்டது. சாலுதல் = நிறைதல். சால்பு = நிறைவு, திருப்தி. அகராதி காண்க.)<br />
============================================================<br />
<br />
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க<br />
துன்பத்துள் துப்பாயார் நட்பு. - 106<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> துன்புற்ற காலத்திலே துணையாய் இருந்து நமக்கு உதவி செய்தோரின் நட்பினை நாம் கைவிடலாகாது; நல்லவர்களான அவர்களின் உறவினை நாம் மறந்துவிடவும் கூடாது. ( இங்கு நட்பினைக் கைவிடுதல் அல்லது துறத்தல் ஆகாது என்பது அவர்க்கு ஒரு துன்பம் நேர்ந்துழி நாம் முன்சென்று உதவ வேண்டும் என்பதாம். மறத்தலாகாது என்பது அவர்களையும் அவர் செய்த உதவியினையும் நினைவில் கொள்ளவேண்டும் என்பதாம். )<br />
=============================================================<br />
<br />
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்<br />
விழுமந் துடைத்தவர் நட்பு. - 107<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> துன்புற்ற காலத்திலே தமது துன்பம் தீர்த்து உதவியவரின் நட்பினை எழுகின்ற நாள்தோறும் எண்ணிப் பார்க்க வேண்டும். ( 104 ஆம் குறளில் உதவியோரின் நட்பினை எவ்வளவு காலம் நினைவில் கொள்ளவேண்டும் என்று கூறியவர் இக் குறளில் எப்படி அதை நினைவில் கொள்ள வேண்டும் என்று விளக்குகிறார். துயில் நீங்கி எழுகின்ற ஒவ்வொரு நாளும் ஒருவருக்கு ஒரு பிறப்பே என்பதால் இங்கு எழுபிறப்பு என்பது நாள்தோறும் என்ற பொருளைத் தரும். இதனை இன்னும் விளக்கும் வகையான் இதற்கு 'எழுமை' என்று அடை கொடுத்து விளக்கினார் என்க. நாள்தோறும் நினைக்காவிட்டால் உதவியையும் உதவி செய்தோரையும் காலப்போக்கில் மறந்துபோய் விடுகின்ற வாய்ப்புகள் அதிகம் என்பதால் இவ்வாறு கூறினார்.)<br />
=============================================================<br />
<br />
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது<br />
அன்றே மறப்பது நன்று. - 108<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> ஒருவர் நமக்குச் செய்த உதவியை மறக்கக்கூடாது. அப்படி அவர் உதவி செய்தபோது தவிர்க்க முடியாமல் நமக்குச் செய்த துன்பத்தை நினைக்கக் கூடாது. ( இதற்குச் சான்றாக விருந்தோம்பலைக் கொள்ளலாம். வந்த விருந்தினர்களுக்கு உணவளித்து அனுப்பும்பொழுது காத்திருக்கச் செய்தல் என்பது சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறதல்லவா. காத்திருக்கும் இந்த நேரத்தில் பசியினால் விருந்தினர்கள் துன்பமடைவார்கள் தானே. பசியாறிய பின்னர் அத் துன்பத்தை அவர்கள் மறந்துவிட்டு விருந்தளித்த நன்றியினை மட்டுமே நினைவில் கொள்ளவேண்டும் என்கிறார். சரி, எப்படி ஒருவர் செய்த துன்பத்தை மறப்பது?. இதற்கான வழிமுறையினை அடுத்த குறளில் கூறுகிறார். ) <br />
=============================================================<br />
<br />
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த<br />
ஒன்றுநன்று உள்ளக் கெடும். - 109<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> உயிரையே வேரறுப்பது போன்றதோர் கொடிய துன்பத்தை ஒருவர் நமக்கு அளித்தபோதும் அவர் நமக்கு செய்த ஒரு நன்மையினை நாம் நினைத்த அளவில் அத் துன்பம் மறையும். ( இதற்கும் சான்றாக விருந்தோம்பலையே கொள்ளலாம். கடும்பசி என்பது உயிரை வேரறுப்பதை ஒத்த கொடிய துன்பம் என்பதை நாம் அறிவோம். உணவுக்காக காத்திருக்கும்போழுது இத் துன்பம் இன்னும் பெருகி நம் உயிரை வாட்டும். விருந்தளிப்பவர் மீது கடும் சினத்தை ஏற்படுத்தும். ஆனால் பசியாறியவுடன் நாம் அவர் மீது சினம் கொள்கிறாமோ? இல்லை. ஏனென்றால் அவர் செய்த நன்மையினை அதாவது விருந்துணவின் சுவையினை நினைத்த மாத்திரத்தில் அச் சினமெல்லாம் போய்விடுகிறதன்றோ!. )<br />
===============================================================<br />
<br />
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை<br />
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. - 110<br />
<br />
<b>தி.பொ.ச. உரை:</b> (கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற) கொடிய குற்றங்களில் ஈடுபட்டாலும் கூட ஒருவன் அக் குற்றங்களுக்கான தண்டனைகளில் இருந்து சில நேரங்களில் தப்பிவிடலாம். ஆனால், தனக்கு நன்மை செய்த ஒருவரிடத்திலே நன்றியை மறந்து குற்றமிழைத்தால், அக் குற்றத்திற்கான தண்டனையில் இருந்து தப்பவே முடியாது. ( இதற்கு சான்றாக ஆற்றினை எடுத்துக் கொள்ளலாம். ஆற்றில் நீர் உள்ளபோது குடிப்பதற்கும் வேளாண்மைக்கும் அது உதவுகிறது. அதே ஆற்றில் நீர் வற்றியதும் அதன் மணலையே அள்ளிச்சென்று கட்டடங்கள் கட்டுகிறோம். இச்செயல் ஆற்றுக்கு நாம் செய்யும் தீங்காகும். ஏனென்றால் அந்த மணல் தான் ஆற்றின் போக்கிற்கும் நிலைப்பாட்டிற்கும் உதவுகிறது. ஆற்றில் மறுமுறை நீர் வரும்போது மணல் குறைபாட்டினால் வெள்ளம் ஏற்பட்டு அது அருகில் இருக்கும் குடியிருப்புக்கள் மற்றும் வயல்களில் புகுந்து அழித்து விடுகிறது. இக் குறளுக்கு இன்னொரு சான்றாகக் காற்றினையும் கொள்ளலாம். காற்றானது நமக்கு உயிர்வாழத் தேவையான உயிர்வளியினைத் தந்தும் நமது உணவுப் பொருளைத் தயாரிக்கும் தாவரங்களுக்கு கரியமில வாயுவினைத் தந்தும் உதவுகிறது. ஆனால் நாம் அக் காற்று செய்த நன்றியினை மறந்து அதனை மாசுபடுத்திக் கொண்டே இருக்கிறோம். இந்த நன்றி கெட்ட செயலின் பலன்?. ஓசோனில் ஓட்டை, அமில மழை, புவி வெப்பமயம், துருவப் பனி உருக்கம் போன்ற இயற்கை சீரழிவுகளால் மனித இனம் மென்மெல அழிந்து வருகிறது. இந்த அழிவில் இருந்து உய்ய வேண்டுமென்றால், ஆற்றிற்கும் காற்றிற்கும் நன்மை செய்கிறோமோ இல்லையோ இனியேனும் இதுபோன்ற நன்றி கெட்ட செயல்களில் ஈடுபடாமல் இருப்போமாக.! )<br />
===================== வாழ்க தமிழ்!===========================</div>
பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6426891971121076187.post-6438765460415193462012-12-15T12:52:00.002+05:302012-12-15T12:52:38.617+05:30இனியவை கூறல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்<br />
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். - 91<br />
<br />
<b><i>தி.பொ.ச.உரை:</i> </b>செம்பொருளாகிய அறத்தின் தன்மைகளைத் தெளிவாக அறிந்தவர்கள் தீங்கில்லாத அறக் கருத்துக்களையே பேசுமிடத்தும் அன்பு கலந்து இனிமையாகவே கூறுவர்.<br />
==========================================================<br />
<br />
அகன்அமர்ந்து ஈதலில் நன்றே முகனமர்ந்து<br />
இன்சொலன் ஆகப் பெறின். - 92<br />
<br />
<b><i>தி.பொ.ச.உரை:</i></b> இல்லத்திற்குள் அழைத்து அமரவைத்து உணவிடுவதற்கு தன்னிடத்திலே ஒரு பொருளுமில்லை ஆயினும் தம் இல்லத்தின் முன்னால் இருந்துகொண்டு வரும் விருந்தினர்களின் மனம் கோணாதவாறு முகமலர்ந்து இனிமையாகப் பேசி வழியனுப்புவதும் நற்செயலே ஆகும்.<br />
==========================================================<br />
<br />
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்<br />
இன்சொ லினதே அறம். - 93<br />
<br />
<b><i>தி.பொ.ச.உரை</i></b>: (விருந்தினர்களிடத்தில்) முகம் மலர்ந்து கருணையோடு பார்ப்பதும் அகம் மலர்ந்து அன்பொழுக இனிய சொற்களைப் பேசுவதும் அறச்செயலே ஆகும். ( இன்சொலினதும் என்பதற்குப் பதிலாக இன்சொலினதே என்று வந்துள்ளது.)<br />
=========================================================<br />
<br />
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்<br />
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. - 94<br />
<br />
<b><i>தி.பொ.ச. உரை:</i></b> யாவர்க்கும் இன்பம் தரும் இனிய சொற்களையே எப்போதும் பேசி வாழ்வோரின் வாழ்க்கையில் துன்பம் தருவதான வறுமை என்பது வருவதில்லை. ( துவ்வாமை என்பதற்கு அனுபவமின்மை (நுகராமை), வேண்டாமை, வறுமை என்ற பொருட்கள் உண்டு. இவற்றுள் துன்பம் தரும் இயல்புடையது வறுமை மட்டுமே. அதனான் துன்புறூஉம் துவ்வாமை என்பது ஈண்டு வறுமையையே குறித்தது என்க. தாம் மட்டும் மகிழாது தம்மை அண்டி வரும் அனைவரையும் மகிழ்விக்கும் பண்பினால் இம் மக்கள் மகிழ்ச்சிக்குக் குறைவின்றி வாழ்வார்கள் என்கிறார் வள்ளுவர்.)<br />
========================================================<br />
<br />
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு<br />
அணியல்ல மற்றுப் பிற. - 95<br />
<br />
<b><i>தி.பொ.ச. உரை: </i></b>நுகர்பொருள் அனைத்தும் உடையவனாய் ஒருவன் இருந்தாலும் அவனுக்குப் பெருமையும் புகழும் சேர்ப்பது அவனது இனிமையாகப் பேசும் பண்பே ஒழிய வேறில்லை. ( இக் குறளில் வரும் பணி என்பது நுகர்பொருளைக் குறிக்கும்.)<br />
========================================================<br />
<br />
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை<br />
நாடி இனிய சொலின். - 96<br />
<br />
<b><i>தி.பொ.ச. உரை</i></b>: நல்ல சொற்களைத் தேர்ந்தெடுத்து இனிமையாகப் பேசிப் பழகி வந்தால் மனதிலுள்ள அறியாமை அழிந்து நல்லறிவு உண்டாகும். ( இன்சொல் பேசுவதால் உண்டாகும் பயன் இதனானும் உணர்த்தப்பட்டது.)<br />
=======================================================<br />
<br />
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று<br />
பண்பின் தலைப்பிரியாச் சொல். - 97<br />
<br />
<b><i>தி.பொ.ச.உரை:</i></b> பிறரிடத்து இனிமையுடன் பேசப்படும் சொற்கள் அவருடனான உறவினை மேம்படுத்துவதுடன் அவருக்கு நன்மையினையும் அளித்து அதனால் தமக்கு செய்ந்நன்றியினையும் அளிக்க வல்லதாம். ( இக்குறளில் வரும் நயன் என்பது உறவினையும் நன்றி என்பது செய்ந்நன்றியினையும் குறிக்கும்.)<br />
======================================================<br />
<br />
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்<br />
இம்மையும் இன்பம் தரும். - 98<br />
<br />
<b><i>தி.பொ.ச. உரை: </i></b>வறுமை நிலையில் இருந்தாலும் ஒருவன் குற்றம் நீங்கிய இனிய சொற்களை பேசிவந்தால் அவனது இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும் இன்பம் உண்டாகும். ( இங்கு சிறுமை என்பது வறுமையினைக் குறிக்கும். இம்மை என்பது பிறப்பு முதல் 60 ஆண்டுகள் வரையிலான இல்லற வாழ்க்கை. மறுமை என்பது 60 க்கு மேல் வாழும் துறவற வாழ்க்கை.)<br />
======================================================<br />
<br />
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ<br />
வன்சொல் வழங்கு வது. - 99<br />
<br />
<b><i>தி.பொ.ச.உரை:</i></b> இனிய சொற்களைப் பேசியபோது நன்மை விளைந்ததை நேரடியாகக் கண்டும் பின்பொரு சமயம் கொடிய சொற்களை ஒருவன் பேசுவது எதனாலோ?.<br />
======================================================<br />
<br />
இனிய உளவாக இன்னாத கூறல்<br />
கனிஇருப்பக் காழ்கவர்ந் தற்று. - 100<br />
<br />
<b><i>தி.பொ.ச.உரை</i></b>: இனிய சொற்கள் இருக்கும்போது அதைவிடுத்து கடுஞ்சொற்களை ஒருவன் பயன்படுத்தும் செயலானது பழுத்த இனிய பழத்தைத் தின்னாமல் அதனுள் இருக்கும் கசப்பான கடினமான கொட்டையினை தின்கின்ற அறிவற்ற செயலுக்கு ஒப்பாகும்.<br />
<b><a href="http://thiruththam.blogspot.in/2009/01/blog-post_30.html" target="_blank">(ஆய்வுக்கட்டுரை)</a></b><br />
======================================================<br />
</div>
பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6426891971121076187.post-73818878809877812782012-08-31T15:41:00.001+05:302012-08-31T15:41:30.290+05:30விருந்தோம்பல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி<br /> வேளாண்மை செய்தற் பொருட்டு. - 81<br /><br /><i><b>தி.பொ.ச.உரை</b></i>: இல்லறத்தில் இருந்து பொருள் சேர்த்து வாழ்வதின் பயனானது வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் பசியாற்றுவதற்கே ஆகும். ( இங்கு வேளாண்மை என்பதனை பசியாற்றுதல் என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளார் வள்ளுவர்.)<br />=====================================================<br /><br /> விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா<br /> மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. - 82<br /><br /><i><b>தி.பொ.ச. உரை:</b></i> விருந்தினர்கள் வீட்டிற்கு வெளியே (பசியோடு) காத்திருக்க, பசியினால் தன் இன்னுயிர் போகாமல் காக்கின்ற சிறு உணவாக இருந்தாலும் அதைத் தான் மட்டும் உண்ண வேண்டாம். ( நெடுநாள் பசியினால் உயிர் போகும் தருவாயில் கிடைத்த சிறு உணவு ஆதலால் அதை சாவா மருந்து என்றார். தன் இன்னுயிரைக் காக்கின்ற சாவா மருந்தாக இருந்தாலும் அதையும் விருந்தினர்களுடன் பகிர்ந்தே உண்ண வேண்டும் என்கிறார்.)<br />=================================================<br /><br /> வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை<br /> பருவந்து பாழ்படுதல் இன்று. - 83<br /><br /><i><b>தி.பொ.ச. உரை</b></i>: நாள்தோறும் (தன் வீட்டிற்கு) வரும் விருந்தினர்களின் பசியாற்றுபவனின் இல்வாழ்க்கை துன்பம் வந்து கெட்டுப் போவதில்லை. ( இதற்கான காரணத்தை குறள் 85 ல் கூறுகிறார் வள்ளுவர்.)<br />=======================================================<br /><br /> அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து<br /> நல்விருந்து ஓம்புவான் இல். - 84<br /><br /><b><i>தி.பொ.ச. உரை:</i></b> (வீட்டுக்கு வரும்) விருந்தினர்களை வீட்டு வாசலில் இருந்துகொண்டு முகமலர்ச்சியுடன் தலைவன் வரவேற்க, அவனது இல்லத்தரசியோ வீட்டுக்குள் இருந்தவாறு உள்ளக் களிப்புடன் (உணவு பரிமாறி) நடந்துகொள்வாள். ( இதனால் விருந்தோம்பல் செய்யும் முறை கூறப்பட்டது. இங்கு, 'அகனமர்ந்து' என்பது 'வீட்டுக்குள் இருந்து' மற்றும் 'மனமகிழ்ந்து' என்ற இரண்டுவிதமான பொருட்களில் ஆளப்பட்டுள்ளது. அதைப்போலவே ' முகனமர்ந்து' என்பது ' வீட்டு வாசலில் இருந்து' மற்றும் ' முகமலர்ந்து' என்ற இரண்டு பொருட்களில் ஆளப்பட்டுள்ளது.) <a href="http://thiruththam.blogspot.in/2011/01/blog-post.html" target="_blank"><b>( ஆய்வுக் கட்டுரை)</b></a><br />====================================================<br /><br /> வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி<br /> மிச்சில் மிசைவான் புலம். - 85<br /><br /><i><b>தி.பொ.ச. உரை: </b></i>விருந்தினர்களின் பசியாற்றியது போக எஞ்சியதை உண்டு மகிழ்பவனின் விளைநிலத்தில் பயிர்கள் விளைவதற்கு நீர் பாய்ச்சவும் வேண்டுமோ? (தேவையில்லை என்கிறார் வள்ளுவர். காரணம் நெஞ்சில் ஈரம் உள்ள இம் மக்களின் வயலிலும் ஈரப்பசை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் என்பதால். இக் காரணத்தால் தான் இம் மக்களது வாழ்க்கை வறுமைத் துன்பத்தால் ஒருபோதும் அழிந்து போகாது என்று குறள் 83 ல் கூறினார் என்க.) <a href="http://thiruththam.blogspot.in/2009/09/blog-post.html" target="_blank"><b>( ஆய்வுக் கட்டுரை)</b></a><br />======================================================<br /><br /> செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்<br /> நல்விருந்து வானத் தவர்க்கு. - 86<br /><br /><i><b>தி.பொ.ச. உரை: </b></i>செல்லும் விருந்தினர்களை ( 'இன்னும் சில நாட்கள் தங்கிச் செல்க' எனக் கூறித்) தடுப்பவனும் தாம் உணவு உண்ணும் முன் புதிதாக வரக்கூடிய விருந்தினர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவனும் ஆகிய ஒருவனுக்கு பசுக்கள் எந்நேரத்திலும் பால் தரும். ( காரணம், மனிதரின் குணநலன்களை உணரவல்ல ஆற்றல் பசுக்களுக்கு உண்டு என்பதால். இங்கு வானத்தவர் என்று வள்ளுவர் பசுக்களையே சுட்டுகிறார். அமிர்தம் ஆகிய பாலை உடையதால் வானத்தவர் என்றும் வானோர் என்றும் வானுறையும் தெய்வம் என்றும் பசுக்களுக்குப் பெயருண்டு. விருந்தோம்பலில் சிறந்த வீட்டில் இருக்கும் பசுக்கள் கூட எந்த நேரத்திலும் அகமகிழ்ந்து பால் தரும் என்பது இதனான் உணர்த்தப்பட்டது. ) <b><a href="http://thiruththam.blogspot.in/2012/01/2.html" target="_blank">( ஆய்வுக் கட்டுரை) </a> </b><br />======================================================<br /><br /> இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்<br /> துணைத்துணை வேள்விப் பயன். - 87<br /><br /><i><b>தி.பொ.ச. உரை:</b></i> விருந்தோம்பலின் பயன் இவ்வளவுதான் என்று அறுதியிட முடியாது. பசியாறிய விருந்தினர் அடையும் மகிழ்ச்சியின் அளவே அதன் அளவாகும். ( இங்கு ' வேள்வி' என்ற சொல்லின் மூலம் வள்ளுவர் 'பசியாற்றும்' செயலையே குறிப்பிடுகிறார். எப்படி யாக குண்டத்தில் வளர்க்கப்படும் தீக்கு உணவாக பல பொருட்கள் இடப்படுகிறதோ அதைப்போல வயிற்றில் வளரும் பசித்தீக்கு உணவு அளிக்கப்படுவதால் பசியாற்றுதலையும் 'வேள்வி' என்றார் என்க.) <br />======================================================<br /><br /> பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி<br /> வேள்வி தலைப்படா தார். - 88<br /><br /><i><b>தி.பொ.ச. உரை:</b></i> (இல்லம் நாடிவரும்) விருந்தினர்களின் பசியாற்றுதலைச் செய்யாமல் உணவுப்பொருளைச் சேமித்துவைப்போர் (அதை இழக்குமிடத்து) எந்த ஆதரவுமின்றி வருந்துவர். ( நெஞ்சில் ஈரமற்ற இத்தகைய மக்களின் விளைநிலத்திலும் விளைச்சல் குன்றிப்போவதால் உணவின்றியும் பிறருடைய உதவியின்றியும் துன்புறுவர் என்றார்.)<br />======================================================<br /><br /> உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா<br /> மடமை மடவார்கண் உண்டு. - 89<br /><br /><i><b>தி.பொ.ச. உரை: </b></i>மிகுதியான உணவுப்பொருள் இருந்தும் 'இல்லை' என்று கூறி விருந்தினரின் பசியாற்றாதவர்கள், கற்றிருப்பினும் அறிவில்லாத மூடர்களே ஆவர். ( காரணம், இப்படிச் சேமித்து வைத்து அப்பொருளை இழந்தக்கால் அவர்கள் ஆதரவின்றி வருந்த நேரிடும் என்பதனை முன்னரே அறியாமையால். )<br />======================================================<br /><br /> மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து<br /> நோக்கக் குழையும் விருந்து. - 90<br /><br /><i><b>தி.பொ.ச. உரை: </b></i>(செடியில் பூத்திருக்கும்) அனிச்ச மலரானது அதனருகில் சென்று அதனை மோந்து பார்த்தால் தான் வாடும். ஆனால் விருந்தினர்களோ இல்லத்தார் கண்களில் தோன்றும் வெறுப்பினைத் தூரத்தில் கண்டே வருந்திச் சென்றுவிடுவர். ( எனவே விருந்தினர்களை இன்முகம் காட்டி வரவேற்க வேண்டும் என்கிறார். அனிச்ச மலரைக் காட்டிலும் விருந்தினர் மென்மையானவர் என்பது இதனான் உணர்த்தப்பட்டது.) <a href="http://thiruththam.blogspot.in/2011/09/blog-post.html" target="_blank"><b>(ஆய்வுக் கட்டுரை)</b></a><br />====================================================</div>
பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6426891971121076187.post-92217621388958256422012-08-29T17:21:00.001+05:302012-08-29T17:21:17.293+05:30அடக்கமுடைமை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை<br /> ஆரிருள் உய்த்து விடும். - 121<br /><br /><i><b>தி.பொ.ச. உரை: </b></i>அடக்கமானது அனைவரும் விரும்பத்தக்க முகப்பொலிவைத் தரும். அடங்காமல் சினம் கொள்வது முகத்திற்கு இருளையே தரும். (இங்கு அமரருள் = அமர்+அருள்= விரும்பத்தக்க முகப்பொலிவு. எதையும் தன்னடக்கத்துடன் கேட்டுக் கொண்டு பொறுமையாக புன்சிரிப்புடன் இருப்போர் முகம் பொலிந்து காணப்படும். எதற்கெடுத்தாலும் அடக்கமின்றி சினம் கொள்வோரின் முகம் இருண்டு கருமையாகக் காணப்படும் என்றார்.)<br />===============================================<br /><br /> காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்<br /> அதனினூஉங் கில்லை உயிர்க்கு. - 122<br /><br /><i><b>தி.பொ.ச. உரை:</b></i> அடக்கத்தை விட ஒருவருக்கு உயர்வினைத் தரக்கூடிய செல்வம் வேறொன்றில்லை என்பதால் அந்த செல்வத்தை ஒருவர் எந்த சூழ்நிலையிலும் (கைவிடாமல்) போற்றிப் பாதுகாக்க வேண்டும். <br />====================================================<br /><br /> செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து<br /> ஆற்றின் அடங்கப் பெறின். - 123<br /><br /><b><i>தி.பொ.ச. உரை:</i></b> அறச்செயல்கள் இவை என அறிந்து அறநெறிப்படி செய்தாலும் அவற்றையும் தன்னடக்கத்துடன் செய்வதே ஒருவனுக்கு நன்மையைத் தரும். ( காரணம், அடக்கமின்றி செய்யப்படும் அறச்செயல்கள் அகந்தையை உண்டாக்கி துன்பத்தைத் தந்து விடும்.)<br />===============================================<br /><br /> நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்<br /> மலையினும் மாணப் பெரிது. - 124<br /><br /><i><b>தி.பொ.ச. உரை</b></i>: தன்னுடைய இயல்பான நிலையினின்று மாறாமல் இருந்து மலைக்கு அடங்குவதைப் போல அதன் பின் சென்று மறைந்தாலும் கதிரவன் அந்த மலையைக் காட்டிலும் மிகப் பெரியதே ஆகும். அதைப்போல, தன்னுடைய இயல்பான நிலையினின்று இறுதிவரை வழுவாமல் பொறுமையுடன் அடங்கி இருப்பவன், தன்னை எதிர்த்து வாதிட்டு வருத்துபவனைக் காட்டிலும் உள்ளத்தால் மிக உயர்ந்தவனே ஆவான். ( இங்கு, மலை என்பது இரண்டு பொருட்களைக் குறிக்கும். ஒன்று மண்ணாலும் கல்லாலும் ஆனது. இன்னொன்று மலைதலாகிய வினையைச் செய்பவன். மலைதல் = வாதிட்டு வருத்துதல், எதிர்த்துப் பேசுதல்). <br />==============================================<br /><br /> எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்<br /> செல்வர்க்கே செல்வம் தகைத்து. - 125<br /><br /><b><i>தி.பொ.ச. உரை: </i></b>அடக்கமாகிய பண்பு பொதுவாக யாவருக்கும் நன்மையே செய்தாலும் செல்வந்தர்களுக்குப் பெருமையைத் தேடித் தருகின்ற ஒரே செல்வமாக இதுவே இருக்கிறது. ( காரணம் சாதாரண மக்களைக் காட்டிலும் செல்வந்தர்கள் தான் தமது பண பலத்தாலும் செல்வாக்காலும் மிக எளிதில் அகந்தை கொண்டு விடுவர். எனவே இவர்களுக்குத் தான் அடக்கமானது மிகவும் பெருமையைத் தருவது என்றார்.)<br />===============================================<br /><br /> ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்<br /> எழுமையும் ஏமாப் புடைத்து. - 126<br /><br /><i><b>தி.பொ.ச. உரை</b></i>: (துன்பம் வரும்போது) ஒரு ஓட்டுக்குள் தனது ஐந்து உறுப்புக்களையும் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல (துன்பம் நேரும்பொழுது) தனது ஐம்புலன்களை அடக்கியாளத் தெரிந்தவனுக்கு ஒவ்வொரு நாளும் பாதுகாப்பானதே. ( இங்கு 'ஒருமை' என்று ஆமையின் ஓட்டினையும் 'எழுமை' என்று ஒவ்வொரு நாளையும் குறிப்பிடுகிறார். இதே போல 'எழுபிறப்பு' என்ற சொல்லின் மூலம் குறள் 62 லும் ஒவ்வொரு நாளையே குறித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. )<br />================================================<br /><br /> யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்<br /> சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. - 127<br /><br /><b><i>தி.பொ.ச.உரை:</i></b> (துன்பம் நேரும் போது) ஐம்புலன்களையும் அடக்க முடிகிறதோ இல்லையோ நாவினைக் கட்டாயம் அடக்கியாள வேண்டும். இல்லையேல் தவறாகப் பேசியமைக்காகப் பின்னர் வருந்த நேரிடும். ( ஒருவர் தவறாக நம்மிடத்தில் பேசும்போது அல்லது நடந்து கொள்ளும் போது அதன் எதிர்வினையாக முதலில் நாம் கையை ஓங்குவதில்லை. நமது வாய் தான் முந்துகிறது. எனவே தான் நாவை முதலில் அடக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.)<br />=================================================<br /><br /> ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்<br /> நன்றாகா தாகி விடும். - 128<br /><br /><i><b>தி.பொ.ச. உரை</b></i>: (துன்பம் நேரும் போது தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு நாவை அடக்காமல்) ஒரே ஒரு பொய் / குறளை / கடுஞ்சொல்லைக் கூறிவிட்டாலும் அதன் விளைவு நன்மையைத் தராது. <br />=================================================<br /><br /> தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே<br /> நாவினாற் சுட்ட வடு. - 129<br /><br /><i><b>தி.பொ.ச. உரை</b></i>: தீயினால் சுடப்பட்டது ஒருமுறை தான் என்பதால் அந்த புண் முழுதும் ஆறிவிடும். ஆனால் நாவினின்று வெளிப்பட்ட கடுஞ்சொற்கள் (கேட்டோரின் மனதுக்குள் இருந்துகொண்டு பலமுறையும்) சுட்டுக் கொண்டே இருப்பதால் அது ஆறாமல் வடுவாகி விடும். <br />===================================================<br /><br /> கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி<br /> அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. - 130<br /><br /><i><b>தி.பொ.ச. உரை:</b></i> (எந்தச் சூழ்நிலையிலும்) சினம் எழாமல் தன்னைக் காத்துக் கொள்பவனும் கற்ற அறிவினால் அகந்தை கொள்ளாமல் அடங்கி இருப்பவனும் ஆகிய ஒருவனைக் காண்பதற்காக அரசனே அவன் வரும் வழியில் விழிவைத்துக் காத்துக் கொண்டிருப்பான்.<br />==================================================<br /></div>
பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6426891971121076187.post-69518664489210196002012-08-18T20:00:00.001+05:302012-08-18T20:00:46.152+05:30அன்புடைமை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்<br /> புன்கணீர் பூசல் தரும். - 71<br /><br /><b><i>தி.பொ.ச.உரை:</i></b> அன்பை (மனதுக்குள்) அடைத்து வைக்கின்ற தாழ்ப்பாள் இவ் உலகில் இல்லை. ஏனென்றால் அன்புடையோரைக் காணுமிடத்து வெளிப்படும் கண்ணீரே அவரது அன்பை வெளிப்படுத்தி விடும். ( என்பைத் தோலுக்குள் அடைத்து உடலென்று உலகில் உலவ விட்ட இறைவனுக்கு அன்பை அடைத்துவைக்கத் தெரியாதது கண்டு வியக்கிறார் வள்ளுவர்.)<br />=============================================<br /> <br /> அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்<br /> என்பும் உரியர் பிறர்க்கு. - 72<br /><br /><b><i>தி.பொ.ச. உரை</i></b>: எல்லாவற்றையும் தமக்கே சொந்தம் என்று கொண்டாடுபவர்கள் அன்பில்லாதவர்கள் ஆவர். கேட்டால் தனது உடல் எலும்பினைக் கூட பிறர்க்கு அளிக்க முன்வருபவர்களே அன்புடையோர் ஆவர். <br />===================================================<br /><br /> அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு<br /> என்போடு இயைந்த தொடர்பு. - 73<br /><br /><b><i>தி.பொ.ச. உரை</i></b>: எப்படி உடலுக்கு எலும்பு ஆதாரமாக இருந்து செயல்படுகிறதோ அதைப்போல அன்பானது உயிருக்கு ஆதாரமாய் இருந்து செயல்படுகிறது.<br />===================================================<br /><br /> அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்<br /> நண்பு என்னும் நாடாச் சிறப்பு. - 74<br /><br /><b><i>தி.பொ.ச. உரை:</i></b> அன்பானது பிறர் மீது அக்கறையை ஏற்படுத்தும். இந்த அக்கறையானது நாளடைவில் நட்பாக மாறி அளவற்ற இன்பத்தைத் தரும்.<br />===============================================<br /><br /> அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து<br /> இன்புற்றார் எய்தும் சிறப்பு. - 75<br /><br /><b><i>தி.பொ.ச.உரை</i></b>: உயிர்களிடத்தில் காட்டப்படும் அன்பே உலகில் இன்பமும் புகழும் பெறுவதற்குக் காரணமாய் விளங்குகிறது என்று அறிஞர் கூறுவர். <br />================================================<br /><br /> அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்<br /> மறத்திற்கும் அஃதே துணை. - 76<br /><br /><b><i>தி.பொ.ச. உரை: </i></b>அன்பானது அறச் செயல்களுக்கு மட்டுமே அடிப்படையாகும் என்று அறியாதோர் கூறுவர். (பல நேரங்களில்) வீரச்செயல்களுக்கும் அன்பே அடிப்படையாய் இருக்கிறது. ( அன்பானது கோழையைக் கூட வீரனாக்கும் என்று இதன் மூலம் உறுதிப்படுத்துகிறார் வள்ளுவர்.)<br />================================================<br /><br /> என்பி லதனை வெயில்போலக் காயுமே<br /> அன்பி லதனை அறம். - 77<br /><br /><b><i>தி.பொ.ச. உரை</i></b>: எலும்பில்லாத புழு வெயிலில் அகப்பட்டுத் துன்புறுவதைப் போல அன்பில்லாத அற்பர்கள் (அரசனுடைய) நீதியின் பிடியில் சிக்கித் துன்புறுவர். <br />===================================================<br /><br /> அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்<br /> வற்றல் மரந்தளிர்த் தற்று. - 78<br /><br /><b><i>தி.பொ.ச. உரை:</i></b> உள்ளத்தில் அன்பு எனும் ஈரம் இல்லாதவருடைய உயிர் வாழ்க்கையானது பாலை நிலத்தில் நீரின் ஈரம் இல்லாமல் வற்றிப் போன ஒரு மரம் மீண்டும் தளிர்ப்பதைப் போன்றதாகும். (அதாவது பூமிக்குக் கீழே நீரின்றி வற்றிப்போன ஒரு மரம் பெய்த மழையால் சிறிது தளிர்த்தாலும் பாலைநிலத்தின் அகத்தே ஈரமின்மையால் விரைந்து உலர்ந்துவிடும். அதுபோல அகத்தில் சிறிதும் அன்பில்லாமல் புறத்தில் மட்டும் அன்புடையதுபோல நடப்பவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருப்பதுபோலத் தோன்றினாலும் வெகு விரைவில் அது இல்லாது அழியும் என்றார்.) <a href="http://thiruththam.blogspot.in/2010/09/blog-post.html" target="_blank"><b>(ஆய்வுக் கட்டுரை)</b></a><br />=================================================<br /><br /> புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை<br /> அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. - 79<br /><br /><i><b>தி.பொ.ச. உரை</b></i>: முகத்தின் புற உறுப்புக்களாகிய கண், காது, மூக்கு, வாய் போன்ற எல்லாம் ஒழுங்காய் அமைந்திருப்பினும் அகத்தில் அன்பு இல்லாவிட்டால் அந்த முகத்தில் அழகு இருக்காது. <br />================================================<br /><br /> அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு<br /> என்புதோல் போர்த்த உடம்பு. - 80<br /><br /><i><b>தி.பொ.ச.உரை: </b></i>உடலில் உயிர் நிலைபெற்றிருப்பதற்கு அன்பே காரணமாகும். அந்த அன்பில்லாதவர் எலும்பைத் தோலால் போர்த்திய உயிரற்ற ஒரு நடைபிணமே ஆவர். <br />===============================================</div>
பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6426891971121076187.post-29566535140387593752012-08-13T13:58:00.001+05:302012-08-13T15:06:49.656+05:30புதல்வரைப் பெறுதல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த<br />
மக்கட்பேறு அல்ல பிற. - 61<br />
<br />
<b><i>தி.பொ.ச. உரை:</i></b> மக்களின் பண்பட்ட அறிவினால் கிடைக்கின்ற மகிழ்ச்சியைக் காட்டிலும் மக்களால் பெற்றோர் அடையத்தக்க பெரும்பேறு வேறொன்றை யான் அறியேன். <br />
==================================================<br />
<br />
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்<br />
பண்புடை மக்கட் பெறின். - 62<br />
<br />
<b><i>தி.பொ.ச. உரை</i></b>: மக்கள் பண்புடையவராய் இருப்பின், பெற்றோருக்கு ஒரு நாளும் துன்பங்கள் இல்லை; பழிச்சொல்லும் இல்லை. ( குறள் எண் 339 ன் படி, உறங்கி எழுகின்ற ஒவ்வொரு நாளையும் வள்ளுவர் ஒரு பிறப்பாகக் கருதுவதால், இங்கு எழுபிறப்பு என்ற சொல்லின் மூலம் நாள்தோறும் என்ற பொருளைக் குறித்தார் என்க.)<br />
==============================================<br />
<br />
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்<br />
தம்தம் வினையான் வரும். - 63<br />
<br />
<i><b>தி.பொ.ச. உரை: </b></i>தம் மக்களையே தமது செல்வங்கள் என்று கூறி மகிழ்வர் பெற்றோர். (ஆனால் அம் மக்கள் உண்மையிலேயே) அவர்களுக்குச் செல்வங்களாவது அம் மக்கள் செய்யும் செயல்களைப் பொறுத்தே அமைகின்றது. <br />
==============================================<br />
<br />
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்<br />
சிறுகை அளாவிய கூழ். - 64<br />
<br />
<b><i>தி.பொ.ச. உரை</i></b>: மக்கள் தமது கையினால் கொடுத்தது சிறிதளவு கூழானாலும் அது அமிர்தத்தினை விட மிகவும் இனிமையாக இருந்தது என்று மகிழ்வர் பெற்றோர்.<br />
===============================================<br />
<br />
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்<br />
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. - 65<br />
<br />
<b><i>தி.பொ.ச. உரை</i></b>: தம் உடலை மக்கள் தழுவும்போது இன்புறுவர் பெற்றோர். (தழுவியவாறே) மக்கள் பேசும்போது அதைக்கேட்டு இன்னும் மகிழ்வர் பெற்றோர். <br />
==============================================<br />
<br />
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்<br />
மழலைச்சொல் கேளா தவர். - 66<br />
<br />
<b><i>தி.பொ.ச. உரை</i></b>: மக்கள் பேசும்போது அதைக்கேட்டு மகிழும் பெற்றோர் அது புல்லாங்குழலை விடவும் யாழினை விடவும் இனிமையானது என்பர். <br />
============================================<br />
<br />
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து<br />
முந்தி இருப்பச் செயல். - 67<br />
<br />
<i><b>தி.பொ.ச.உரை: </b></i>தந்தை தன் மக்கட்கு செய்யும் நற்செயல் யாதெனில், தன் மக்களை கல்விநிலையங்களில் (காலம் தாழ்த்தாமல்) முன்னரே சேர்த்து விடுதலாகும்.<br />
==============================================<br />
<br />
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து<br />
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. - 68<br />
<br />
<b><i>தி.பொ.ச. உரை</i></b>: பெற்றோர், தம்மைக் காட்டிலும் தம் மக்களை கல்வியில் மேம்படச் செய்தலொன்றே உலக உயிர்கள் மகிழ்வுடன் வாழ வழிசெய்யும். <br />
===============================================<br />
<br />
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்<br />
சான்றோன் எனக்கேட்ட தாய். - 69<br />
<br />
<b><i>தி.பொ.ச. உரை:</i></b> தன் மகனை முதன்முதலில் 'காணும்போது' மகிழ்கிறாள் தாய். அவனை அறிஞன் எனப் பிறர் கூறக் 'கேட்கும்போதோ' இன்னும் மகிழ்கிறாள் தாய். <br />
==================================================<br />
<br />
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை<br />
என்நோற்றான் கொல்எனும் சொல். - 70<br />
<br />
<b><i>தி.பொ.ச. உரை</i></b>: (தன்னைக் கல்வியறிவு பெறச்செய்த) தந்தைக்கு ஒரு மகன் உதவிசெய்ய விரும்பினால், ' இவனை மகனாகப் பெறுவதற்கு இவன் தந்தை என்ன தவம் செய்தானோ' என்று பிறர் போற்றும் அளவுக்குப் பண்பட்ட அறிவுடன் நடந்து கொள்ள வேண்டும். <br />
==================================================</div>
பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6426891971121076187.post-22044884854461441722012-08-09T17:40:00.000+05:302019-11-15T22:06:50.999+05:30வாழ்க்கைத் துணைநலம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்<br />
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. - 51<br />
<br />
<i><b>தி.பொ.ச. உரை:</b></i> புகுந்த வீட்டிற்கேற்ப தனது குணங்களை மாற்றிக்கொண்டு தனது கணவனின் வருமானத்திற்கேற்ப செலவு செய்பவளே சிறந்த வாழ்க்கைத் துணையாவாள். <br />
=====================================================<br />
<br />
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை<br />
எனைமாட்சித் தாயினும் இல். - 52<br />
<br />
<i><b>தி.பொ.ச. உரை:</b></i> இல்லறத்திற்கேற்ற சிறந்த பண்புகள் ஒருவனது மனைவியிடம் இல்லையானால், அவனது இல்வாழ்க்கை வேறு எவ்வகையிலும் சிறப்புடையது ஆகாது. <br />
===================================================<br />
<br />
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்<br />
இல்லவள் மாணாக் கடை?. - 53<br />
<br />
<i><b>தி.பொ.ச. உரை</b></i>: நல்ல மனைவி இருந்தால் வாழ்க்கையில் எல்லா இன்பங்களும் இருக்கும். இல்லாவிட்டால் அங்கு துன்பங்களே இருக்கும். <br />
================================================<br />
<br />
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்<br />
திண்மைஉண் டாகப் பெறின். - 54<br />
<br />
<b><i>தி.பொ.ச. உரை: </i></b>தனது இல்லறக் கடமைகளை அறநெறி வழுவாமல் செய்வதாகிய கற்பு எனப்படும் கொள்கையினைக் காட்டிலும் ஒரு மனைவிக்கு பெருமை சேர்ப்பது எது உள்ளது? ( எதுவுமில்லை) <br />
=================================================<br />
<br />
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்<br />
பெய்யெனப் பெய்யு மிழை. - 55<br />
<br />
தி.பொ.ச. உரை: பசுவினைக் கூட பேணாதவளாய் தனது கணவனையே பேணி (தனது கடமைகளைத்) தொடங்கும் மனைவியானவள் (கணவன் கொணர்ந்து தந்து) 'அணிக' என்று கூற அணிகலனை அணிந்துகொள்வாள்.' <a href="http://thiruththam.blogspot.in/2010/04/blog-post.html" target="_blank"><b>(ஆய்வுக் கட்டுரை)</b></a><br />
===================================================<br />
<br />
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற<br />
சொற்காத்துச் சோர்விலாள் பெண். - 56<br />
<br />
<i><b>தி.பொ.ச. உரை: </b></i>நாவடக்கத்தால் தன்னைக் காத்தல், தனது கணவனின் சொல்லைப் பேணுதல், தகைசான்ற பெரியோரின் அறிவுரைகளைக் காத்தல் ஆகிய இவற்றில் சிறிதும் தளராதவளே சிறந்த மனைவியாவாள். <br />
====================================================<br />
<br />
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்<br />
நிறைகாக்கும் காப்பே தலை. - 57<br />
<br />
<b><i>தி.பொ.ச. உரை</i></b>: மனைவியானவள் தனது இல்லத்தைக் காவல் காப்பதைக் காட்டிலும் தனது உள்ளத்தை (ஆசைகளை)க் காவல் காப்பதே தலையாய செயலாகும். <br />
===================================================<br />
<br />
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்<br />
புத்தேளிர் வாழும் உலகு. - 58<br />
<br />
<i><b>தி.பொ.ச. உரை</b></i>: மனைவியானவள் தனது கற்புநெறியினால் புகழ் பெற்றால் அப்புகழினைக் கொண்டு பெருஞ்சிறப்புடையதாகக் கருதப்படும் புத்தேளிர் உலகினையே பெற முடியும். <br />
===================================================<br />
<br />
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்<br />
ஏறுபோல் பீடு நடை. - 59<br />
<br />
<b><i>தி.பொ.ச. உரை</i></b>: (கற்புநெறியால்) புகழ் சான்ற மனைவி இல்லாத ஒரு ஆண்மகன், (போரிலே) தனது பகைவர்களை, ஒரு ஆண்சிங்கத்தைப் போல கம்பீரத்துடன் எதிர்கொள்ளமுடியாது. ( இதனால் மனைமாட்சியற்ற மனைவியால் ஒரு ஆடவனின் நிம்மதி மட்டுமின்றி வீரமும் பாதிக்கப்படும் என்றார்.)<br />
==================================================<br />
<br />
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்<br />
நன்கலம் நன்மக்கட் பேறு. - 60<br />
<br />
<b><i>தி.பொ.ச. உரை</i></b>:<br />
<br />
மனைவியைத் தங்கம் என்று சொல்வார்கள். அந்த மனைவி மூலம் நல்ல குழந்தைகளை பெற்றுக் கொள்வது தங்கத்தில் நல்ல அணிகலன்களைச் செய்வதைப் போன்றதாகும்.<br />
===============================================</div>
பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6426891971121076187.post-68813080086170474572012-08-03T17:37:00.000+05:302012-08-03T17:37:31.303+05:30இல்வாழ்க்கை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்<br /> நல்லாற்றின் நின்ற துணை. - 41<br /><br /><i><b>தி.பொ.ச. உரை:</b></i> மூன்றுவகைப்பட்ட இயல்புடையவர்க்கும் இல்லறத்தில் வாழ்பவனே நல்வழியில் நின்று காக்கின்ற துணையாவான். ( இந்த மூவர் யார் என்று அடுத்த குறளில் கூறுகிறார்.)<br />=================================================<br /><br /> துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்<br />
இல்வாழ்வான் என்பான் துணை. - 42<br /><br /><b><i>தி.பொ.ச.உரை: </i></b>மனைவி, குழந்தைகள், பெற்றோர் என்ற மூவகையினருக்கும் இல்லறத்தில் வாழ்பவனே காக்கின்ற துணையாவான். ( பெற்ற தாய்தந்தையரையும் உடன்பிறந்தோரையும் இன்னும் பலவற்றையும் துறந்து கணவனது இல்லமே கதியென வருவதால் இங்கு மனைவியை 'துறந்தார்' என்றார். அனுபவமற்றவரும் வலிமையற்றவருமான குழந்தைகளை 'துவ்வாதவர்' என்றார். இளமை கழிந்தோரும் அகவை மிக்கோருமாகிய தாய் தந்தையரை இறந்தார் என்றார்.)<br />================================================<br /><br /> தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு<br /> ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. - 43<br /><br /><b><i>தி.பொ.ச.உரை</i></b>: புலனின்பம் நீத்தார், பசு, விருந்தினர், சுற்றம், தனது குடும்பம் என்ற ஐவகையினரையும் அறநெறியின்படி பாதுகாப்பதே இல்வாழ்வானின் தலையாய கடமையாகும். <a href="http://thiruththam.blogspot.in/2012/01/2.html" target="_blank"><b>( ஆய்வுக் கட்டுரை)</b></a><br />===============================================<br /><br /> பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை<br /> வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். - 44<br /><br /><i><b>தி.பொ.ச. உரை</b></i>: பழிக்கு அஞ்சி சேர்த்த பொருள் சிறிதாயினும் அதையும் பிறருடன் பகிர்ந்து கொள்பவனுக்கு வாழ்வில் ஒரு குறைபாடும் ஒருபோதும் இருப்பதில்லை. <br />=====================================================<br /><br /> அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை<br /> பண்பும் பயனும் அது. - 45<br /><br /><i><b>தி.பொ.ச. உரை: </b></i>அனைவரிடமும் அன்பு கொண்டு ஒழுகுவதே இல்வாழ்க்கையின் பண்பாகும். அறச் செயல்கள் புரிவதே இல்வாழ்க்கை பெற்ற பயனாகும். <br />================================================<br /><br /> அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்<br /> போஒய்ப் பெறுவ தெவன். - 46<br /><br /><i><b>தி.பொ.ச.உரை</b></i>: அறநெறியின்படி இல்வாழ்க்கை நடத்தி இன்பம் பெறுதலைவிட பிறநெறியில் சென்று என்ன பெறமுடியும்?.<br />( ஒன்றும் பெற முடியாது .)<br />================================================<br /><br /> இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்<br /> முயல்வாருள் எல்லாம் தலை. - 47<br /><br /><i><b>தி.பொ.ச. உரை</b></i>: அறநெறியின்படி பொருளீட்டி இல்வாழ்க்கை நடத்துபவன் எவனோ அவனே பிறநெறியில் சென்று பொருள் ஈட்டுவோரைவிட தலைசிறந்தவனாவான்.<br />=====================================================<br /><br /> ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை<br /> நோற்பாரின் நோன்மை உடைத்து. - 48<br /><br /><b><i>தி.பொ.ச. உரை:</i></b> அறநெறியில் இருந்து வழுவாமல் நடத்தப்படும் இல்லறமானது வலிமையானதாகக் கருதப்படும் துறவறத்தைக் காட்டிலும் வலிமை மிக்கதாகும். <br />======================================================<br /><br /> அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்<br /> பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. - 49<br /><br /><b><i>தி.பொ.ச. உரை: </i></b>அறம் என்று பொதுவாகக் கூறப்படுவது இல்லறமே ஆகும். இதில் பிறரால் வரும் பழி இல்லாதிருந்தால் அதுவே நல்லறமாகும். . . <br />========================================================<br /><br /> வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்<br /> தெய்வத்துள் வைக்கப் படும். - 50<br /><br /><i><b>தி.பொ.ச. உரை:</b></i> இவ் உலகில் அறநெறிப்படி இல்வாழ்க்கை வாழ்பவன் அமிர்தமாகிய பாலுறையும் பசுவிற்கு ஒப்பாகக் கருதப்படுவான். <a href="http://thiruththam.blogspot.in/2012/01/2.html" target="_blank"><b>( ஆய்வுக் கட்டுரை)</b></a><br />=======================================================<br /></div>பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6426891971121076187.post-35040415726250255732012-08-02T18:09:00.001+05:302014-06-07T17:49:58.374+05:30அறன் வலியுறுத்தல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு<br />
ஆக்கம் எவனோ உயிர்க்கு. - 31<br />
<br />
<i><b>தி.பொ.ச. உரை:</b></i> புகழையும் செல்வத்தையும் பயனாகத் தரும்போது அறம் செய்வதைக் காட்டிலும் ஒருவனுக்கு வேறு என்ன நற்செயல் இருக்க முடியும்?.<br />
==============================================<br />
<br />
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை<br />
மறத்தலின் ஊங்கில்லை கேடு. - 32<br />
<br />
<i><b>தி.பொ.ச.உரை</b></i>: அறம் செய்வதைக் காட்டிலும் ஒருவனுக்கு நற்செயல் வேறில்லை. அறம்செய்ய மறப்பதைக் காட்டிலும் ஒருவனுக்கு தீச்செயல் வேறில்லை.<br />
==================================================<br />
<br />
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே<br />
செல்லும்வாய் எல்லாஞ் செயல். - 33<br />
<br />
<i><b>தி.பொ.ச. உரை</b></i>: தமக்குப் பொருத்தமான முறையில் செய்யத்தக்க இடங்களில் எல்லாம் அறச்செயலை தவிர்க்காமல் செய்க.<br />
=================================================<br />
<br />
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்<br />
ஆகுல நீர பிற. - 34<br />
<br />
<b><i>தி.பொ.ச. உரை</i></b>: ஒருவன் தன் மனதளவில் களங்கமற்றவனாக இருப்பது அனைத்து அறத்திற்கும் இன்றியமையாதது. ஏனென்றால் களங்கத்துடன் செய்யும் செயல்கள் எவையும் வெற்று ஆரவாரம் போன்றது. ( அறச்செயலைப் போல இவை புகழும் செல்வமும் தராது.)<br />
===================================================<br />
<br />
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்<br />
இழுக்கா இயன்றது அறம். - 35<br />
<br />
<b><i>தி.பொ.ச. உரை:</i></b> பொறாமை, ஆசை, சினம், இழிசொல் ஆகிய நான்கினையும் தீயவை என்று அறம் கூறுகிறது. <br />
================================================<br />
<br />
அன்றளிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது<br />
பொன்றுங்கால் பொன்றாத் துணை. - 36<br />
<br />
<b><i>தி.பொ.ச. உரை:</i></b> தமது தேவைக்கு மேல் பொருள் சேரும்போது பிறருக்குக் கொடுத்து உதவுவோம் என்று கருதாமல் இப்போதே அறம் செய்யுங்கள். சேர்த்த பொருள் செலவழிந்தாலும் செய்த உதவியானது அழியாமல் துணையாய் நின்று காக்கும்.<br />
===============================================<br />
<br />
அறத்தாறு இதுவென வேண்டா செவிகைப்பப்<br />
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. - 37<br />
<br />
<b><i>தி.பொ.ச.உரை: </i></b>காதுகள் கசக்கும்படியான கடுஞ்சொற்களைக் கேட்டுப் பொறுத்திருப்பவனுக்கும் அவன் மேல்சென்ற (வன்சொற்களால் அடக்குமுறை புரிந்த) வனுக்கும் இடையே சென்று 'அறச்செயலே இது' எனக் கூறவேண்டா. (எவ்வகையானும் இது அறச்செயல் ஆகாது.)". <a href="http://thiruththam.blogspot.in/2011/05/blog-post.html" target="_blank"><b>( ஆய்வுக் கட்டுரை)</b></a><br />
=====================================================<br />
<br />
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்<br />
வாழ்நாள் பழியடைக்கும் கல். - 38<br />
<br />
<b><i>தி.பொ.ச. உரை</i></b>: (செய்யாது) ஒழிந்த நாள் தோன்றாவண்ணம் ஒருவன் அறஞ்செய்து வந்தால் அதுவே அவனது வாழ்நாளில் அவன்மீது பழியேதும் தோன்றாவண்ணம் (பாவக்குழியை) அடைத்துநிற்கும் கல்லாகும். <br />
=====================================================<br />
<br />
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்<br />
புறத்த புகழும் இல. - 39<br />
<br />
<i><b>தி.பொ.ச. உரை: </b></i>இன்பம் எனப்படுவதெல்லாம் அறச்செயல்களால் வருவதேயாகும். அறமற்ற செயல்களில் இன்பமோ புகழோ கிடைப்பதில்லை.<br />
======================================================<br />
<br />
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு<br />
உயற்பால தோரும் பழி. - 40<br />
<br />
<b><i>தி.பொ.ச. உரை: </i></b>ஒருவன் செய்யத்தக்கதெல்லாம் ( புகழ், செல்வம், இன்பம் என்ற மூன்றையும் தருகின்ற) அறச்செயல்களேயாம். செய்யாமல் தவிர்க்க வேண்டியவையெல்லாம் பழியை மட்டுமே தருகின்ற அறமில்லாத செயல்களேயாம். <br />
=====================================================</div>
பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6426891971121076187.post-54620251049193614382012-07-31T20:12:00.001+05:302012-07-31T20:12:41.350+05:30நீத்தார் பெருமை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து<br /> வேண்டும் பனுவல் துணிவு. - 21<br /><br /><b><i>தி.பொ.ச. உரை</i></b>: இவ் உலகில் ஒழுக்கத்துடன் வாழ்ந்து இறந்த பெரியோர்களின் பெருமையைச் சிறப்பிப்பதே அறநூல்களின் நோக்கமாக இருக்க வேண்டும். <br />
=================================================<br /><br /> துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து<br /> இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. - 22<br /><br /><b><i>தி.பொ.ச. உரை</i></b>: உலகியல் இன்பங்களைத் துறந்த பெரியோர்களின் பெருமை எவ்வளவு என்றால் இவ் உலகில் இறந்துபட்ட மாந்தர்களின் எண்ணிக்கை அளவேயாகும். ( அளவற்றது என்பதே பொருள்). <br />
================================================<br />
<br /> இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்<br /> பெருமை பிறங்கிற்று உலகு. - 23<br /><br /><i><b>தி.பொ.ச.உரை: </b></i>இம்மை, மறுமை என்ற இரண்டின் தன்மை அறிந்து இவ் உலகில் அறம் செய்வோரின் பெருமையால் தான் இவ் உலகம் விளங்கிக் கொண்டிருக்கிறது.<br />================================================<br /><br /> உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்<br /> வறனென்னும் வைப்பிற்கோர் வித்து. - 24<br /><br /><b><i>தி.பொ.ச. உரை:</i></b> மன உறுதி என்னும் அங்குசத்தால் ஐம்புலன்களாகிய ஐந்து யானைகளை அடக்கிக் காப்பவன் வறண்ட நிலம் ஆகிய ஊருக்குப் பெய்யும் மழை ஆவான். <a href="http://thiruththam.blogspot.in/2009/09/blog-post_12.html" target="_blank"><b>( ஆய்வுக் கட்டுரை) </b></a><br />===================================================<br /><br /> ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமன்<br /> ஐந்திரனே சாலுங் கரி. - 25<br /><br /><i><b>தி.பொ.ச. உரை:</b></i> ஐம்புலன்களை அடக்கியவரின் ஆற்றல் (பூவுலகினைக் கடந்து) அகன்ற வானத்தில் பரவிநிற்குமோ?. (பரவிநிற்கும் போலும்). இதற்குக் கதிரவனே போதுமான சான்று ஆவான். <a href="http://thiruththam.blogspot.in/2009/09/blog-post_17.html" target="_blank"><b>( ஆய்வுக் கட்டுரை)</b></a><br />====================================================<br /><br /> செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்<br /> செயற்கரிய செய்கலா தார். - 26<br /><br /><i><b>தி.பொ.ச. உரை: </b></i>ஐம்புலன் வென்ற பெரியோரே செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய வல்லவராம். அவரல்லாத சிறியோரால் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமுடியாது.. <br />:====================================================<br /><br /> சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்<br /> வகைதெரிவான் கட்டே உலகு. - 27<br /><br /><i><b>தி.பொ.ச. உரை</b></i>: சுவை, ஒளி, தொடுகை, ஒலி, மணம் என்ற ஐவகை புலனுணர்வுகள் செய்யும் தந்திரங்களை ஆராய்ந்து அறியவல்லவனே இவ் உலகினைக் கட்டுப்படுத்த வல்லவன் ஆவான். <br />====================================================<br /><br /> நிறைமொழி மாந்தர் பெருமை நிறத்து<br /> மறைமொழி காட்டி விடும். - 28<br /><br /><b><i>தி.பொ.ச. உரை</i></b>: மௌனத்தை மொழியாகக் கொண்ட ஐம்புலன் அவித்தோரின் அறிவுப்பெருமையினை அவரது உடல்குறிப்பு மொழிகள் காட்டி நிற்கும். <b>( <a href="http://thiruththam.blogspot.in/2009/09/blog-post_21.html" target="_blank">ஆய்வுக் கட்டுரை) </a></b><br />===================================================<br /><br /> குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி<br /> கணமேயும் காண்டல் அரிது. - 29<br /><br /><i><b>தி.பொ.ச. உரை</b></i>: குணம் ஆகிய குன்றின் மேல் நிற்கும் ஐம்புலன் அவித்தோரிடத்து அற்ப அளவேனும் சினத்தைப் பார்ப்பது அரிதாகும். <b>( <a href="http://thiruththam.blogspot.in/2009/11/blog-post.html" target="_blank">ஆய்வுக் கட்டுரை) </a></b><br />=====================================================<br /><br /> அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்<br /> செந்தண்மை பூண்டொழுக லான். - 30<br /><br /><b><i>தி.பொ.ச. உரை</i></b>: எல்லா மக்களிடத்திலும் வேறுபாடின்றி அன்பு பூண்டு பசியாற்றுவதால் தான் வேளாண் மக்களும் அறவோராகக் கருதப்படுகின்றனர். ( இக் குறள் இந்த அதிகாரத்தில் தவறாக வைக்கப்பட்டுள்ளது. அதற்கு இக் குறளின் பொருளே போதுமான சான்றாகும்.) <br />
====================================================<br /></div>பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6426891971121076187.post-89122558276160062712012-07-30T15:53:00.001+05:302012-07-30T17:42:40.144+05:30வான்சிறப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்<br />
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. - 11<br />
<br />
<b><i>தி.பொ.ச. உரை: </i></b> உலக வாழ்க்கையானது மழையை நம்பியே இருப்பதால் அம் மழையே (உயிர்வாழத் தேவையான) அமிழ்தம் என்று அறியப்படுகிறது.<br />
==============================================<br />
<br />
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்<br />
துப்பாய தூஉம் மழை. - 12<br />
<br />
<i><b>தி.பொ.ச. உரை</b></i>: நுகர்வோருக்குத் தேவையான நல்ல உணவுப்பொருட்களை விளைவிக்கவும் அவருக்குத் தானே ஒரு உணவுப்பொருளாக இருக்கவும் வல்லது மழையாகும்.<br />
=============================================<br />
<br />
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து<br />
உள்நின்று உடற்றும் பசி. - 13<br />
<br />
<b><i>தி.பொ.ச. உரை</i></b>: மேகம் (மழை பெய்யாது) பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இந்த பரந்த உலகெங்கும் பசியானது நிலையாக இருந்து உயிர்களை வாட்டி வதைக்கும். <br />
=============================================<br />
<br />
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்<br />
வாரி வளங்குன்றிக் கால். - 14<br />
<br />
<i><b>தி.பொ.ச. உரை</b></i>: மழை என்னும் நீரின் வளம் குறைபடுமானால் ஏர் கொண்டு உழமாட்டார் உழவர்.<br />
===========================================<br />
<br />
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே<br />
எடுப்பதூஉம் எல்லாம் மழை. - 15<br />
<br />
<i><b>தி.பொ.ச.உரை: </b></i>(பெய்யாமல் பொய்த்து வறுமையில் உழல வைத்துக்) கெடுதல் செய்ய வல்லதும் கெட்டவர்க்கு ஆதரவாய் ஆங்கே பெய்து ( விளைச்சலைப் பெருக்கி அவரது பொருளாதாரத்தினை) உயர்த்துவதும் மழையே ஆகும். <br />
===========================================<br />
<br />
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே<br />
பசும்புல் தலைகாண்பு அரிது. - 16<br />
<br />
<i><b>தி.பொ.ச. உரை:</b></i> மழைத்துளி விழாவிட்டால் இந்த மண்ணில் பசும்புல்லின் தலையைக் கூடக் காண முடியாது. ( இனி பிற உயிர்களின் நிலையினைக் கூறவும் வேண்டுமோ?)<br />
=========================================<br />
<br />
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி<br />
தான்நல்கா தாகி விடின். - 17<br />
<br />
<i><b>தி.பொ.ச. உரை:</b></i> (கடலில் இருந்து ஆவியாகிச் சென்ற) மேகங்கள் தாம் அழிந்து மழையினை வழங்காவிடில் நெடிய கடலும் தனது நீர்வளத்தில் குன்றிப்போகும்.<br />
=======================================<br />
<br />
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்<br />
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. - 18<br />
<br />
<i><b>தி.பொ.ச. உரை:</b></i> மேகங்கள் நீரின்றி வறண்டு போனால் இவ் உலகில் பசுக்களுக்கும் சிறப்பும் பூசனையும் நடவாது. <a href="http://thiruththam.blogspot.in/2012/01/3.html" target="_blank"><b>( ஆய்வுக் கட்டுரை)</b></a><br />
=======================================<br />
<br />
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்<br />
வானம் வழங்கா தெனின். - 19<br />
<br />
<b><i>தி.பொ.ச. உரை</i></b>: மேகங்கள் மழையினை வழங்காவிட்டால் இந்த பரந்த உலக மக்களிடத்தில் கொடுத்து உதவும் குணமும் (தானம்) பொறுமையும் (தவம்) ஆகிய இரண்டு நற்பண்புகளும் தங்காது. <br />
======================================<br />
<br />
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்<br />
வான்இன்று அமையாது ஒழுக்கு. - 20<br />
<br />
<i><b>தி.பொ.ச. உரை: </b></i>யாராயினும் நேர்மை (வான்) இல்லாவிட்டால் ஒழுக்கம் என்பதில்லை. அதைப்போல மழை இல்லாவிட்டால் இந்த உலகமும் இல்லை.<br />
=====================================</div>பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6426891971121076187.post-24718916720207814272012-07-28T16:57:00.001+05:302012-07-30T17:43:53.728+05:30கடவுள் வாழ்த்து<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி<br />
யகவன் முதற்றே உலகு. -1<br />
<br />
<i><b>தி.பொ.ச.உரை:</b></i> எழுத்துக்கள் எல்லாம் அகரத்தினை முதலாகக் கொண்டுள்ளன. அதைப்போல இந்த உலகம் காரண அறிவாய் விளங்கும் இறைவனை முதலாகக் கொண்டுள்ளது. <a href="http://thiruththam.blogspot.in/2010/03/blog-post_21.html" target="_blank"><b><u>( ஆய்வுக் கட்டுரை )</u></b></a><br />
========================================<br />
<br />
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்<br />
நற்றாள் தொழாஅர் எனின். - 2<br />
<br />
<i><b>தி.பொ.ச. உரை: </b></i>தூய அறிவினனான இறைவனின் நன்மை தரும் திருவடிகளைத் தமது சிந்தையில் பேணாதவர்கள் என்ன கற்றிருந்தும் என்ன பயன்?. (ஒன்றுக்கும் உதவாது!)<br />
=======================================<br />
<br />
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்<br />
நிலமிசை நீடுவாழ் வார். - 3<br />
<br />
<i><b>தி.பொ.ச. உரை: </b></i>பரந்த மேலிடமாகிய அண்டவெளியினைக் கடந்துநிற்கும் இறைவனின் மாட்சிமை மிக்க திருவடிகளைச் சேர்ந்தவர்கள் இப் புவியில் (புகழால்) நெடுங்காலம் வாழ்ந்திருப்பர். <a href="http://thiruththam.blogspot.in/2009/04/blog-post_19.html" target="_blank"><b><u>(ஆய்வுக் கட்டுரை)</u></b></a><br />
=====================================<br />
<br />
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு<br />
யாண்டும் இடும்பை இல. - 4<br />
<br />
<i><b>தி.பொ.ச.உரை</b></i>: விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவருக்கு எவ்விடத்தும் துன்பம் என்பதே இல்லை. <br />
=====================================<br />
<br />
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்<br />
பொருள்சேர் புகல்புரிந்தார் மாட்டு. - 5<br />
<br />
<i><b>தி.பொ.ச. உரை</b></i>: இறைவனையே அடையக் கூடிய பொருளாகக் கொண்டு சரணடைந்தோரிடத்தில் இருளாகிய விதியினால் ஏற்படுகின்ற நல்வினை தீவினை ஆகிய இருவினைகளும் சேர்வதில்லை. <a href="http://thiruththam.blogspot.in/2009/04/blog-post_25.html" target="_blank"><u><b>( ஆய்வுக் கட்டுரை)</b></u></a><br />
====================================<br />
<br />
பொறிவாயில் அந்தணன்தாள் பொய்தீர் ஒழுக்க<br />
நெறிநின்றார் நீடுவாழ் வார். - 6<br />
<br />
<i><b>தி.பொ.ச. உரை:</b></i> உருவமும் பெயருமற்ற அந்தணனனாகிய இறைவனின் திருவடிகளைக் கள்ளமில்லாத ஒழுக்கத்துடன் பணிந்து நின்றவர்கள் (இவ் உலகில் புகழால்) நெடுங்காலம் வாழ்ந்திருப்பர். <a href="http://thiruththam.blogspot.in/2011/02/blog-post.html" target="_blank"><b><u>( ஆய்வுக் கட்டுரை)</u></b></a><br />
====================================<br />
<br />
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்<br />
மனக்கவலை மாற்றல் அரிது.- 7<br />
<br />
<i><b>தி.பொ.ச. உரை:</b></i> தனக்கு ஒப்புமையில்லாத ஒருவனாகிய இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவருக்கல்லால் பிறருக்குத் தமது மனக்கவலைகளை மாற்றிக் கொள்வது அரிதான செயலாகும். <br />
====================================<br />
<br />
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்<br />
பிறவாழி நீந்தல் அரிது. - 8<br />
<br />
<i><b>தி.பொ.ச. உரை: </b></i>அறத்தையே கலப்பையாகக் கொண்ட உழவனாகிய இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவருக்கல்லால் பிறருக்கு பிறவி என்னும் ஆழக்குழியினைக் கடப்பது அரிதான செயலாகும். <a href="http://thiruththam.blogspot.in/2012/02/blog-post.html" target="_blank"><b><u>( ஆய்வுக் கட்டுரை) </u></b></a><br />
===================================<br />
<br />
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்<br />
தாளை வணங்காத் தலை. - 9<br />
<br />
<i><b>தி.பொ.ச. உரை</b></i>: எண்வகைக் குணங்களை உடைய இறைவனின் திருவடிகளை வணங்காத ஒரு தலைவனிடத்தில் வீரமும் பொருட்செல்வமும் இருந்தும் பயனில்லாமல் போகும். <a href="http://thiruththam.blogspot.in/2009/05/blog-post_09.html" target="_blank"><u><b>( ஆய்வுக் கட்டுரை)</b></u></a><br />
====================================<br />
<br />
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்<br />
இறைவன் அடிசேரா தார். -10<br />
<br />
<i><b>தி.பொ.ச. உரை</b></i>: இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவரேயல்லால் பிறர் பிறவி என்னும் பெருங்கடலைக் கடப்பது இயலாது.<br />
===================================== <br />
<br /></div>பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.com6